ஐஜிபி: சரணடையுங்கள் அல்லது வேட்டையாடப்படுவீர்

 

igpsurrender1கடந்த சனிக்கிழமை கோலாலம்பூரில் கித்தா லவான் பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் தாங்களாகவே முன்வந்து போலீசாரிடம் சரணடைய வேண்டும் என்று இன்ஸ்பெக்டர் ஜெனரல் காலிட் அபு பாக்கார் கூறியுள்ளார்.

“வரவில்லை என்றால், நாங்கள் அவர்களை தேடுவோம்”, என்று செராஸ்சில் இன்று நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில் ஐஜிபி கூறினார்.

“கம் லா, அவர்களை கண்டுபிடிப்பதில் எங்களுக்கு சிரமம் ஏதும் இல்லை. அவர்கள் வரட்டும். அவர்களை கைது செய்து விசாரணை நடத்துவோம்”, என்று அவர் மிரட்டினார்.

மார்ச் 7 இல், கித்தா லவான் 10,000 பேர் பங்கேற்ற ஒரு பேரணியை நடத்தியது.

இப்பேரணி சம்பந்தமாக சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினர் நிக் நாஸ்மி நிக் அஹமட் மற்றும் பிகேஆர் இளைஞர் பிரிவு தலைவர் சைபுல்லா ஸுல்கிப்லி ஆகியோர் அப்பேரணி சம்பந்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.