நூருல் இஸ்ஸா கைது செய்யப்பட்டார்

 

nuruldetainedபிகேஆரின் உதவித் தலைவரும் லெம்பா பந்தாய் நாடாலுமன்ற உறுப்பினருமான நூருல் இஸ்ஸா இன்று தேசநிந்தனைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

அவரைக் காவலில் வைக்கும் உத்தரவுக்கான நீதிமன்ற விசாரணை நாளை நடைபெறவிருப்பதால் அவர் இன்றிரவை ஜிஞ்ஜாங் போலீஸ் நிலையத்தில் கழிக்க வேண்டியுள்ளது.

மார்ச் 7 இல் நடந்த அன்வார் ஆதரவு பேரணியான கித்தா லவானில் பங்கேற்றதற்கான வாக்குமூலத்தை அளிக்க அவர் டாங்வாங்கி போலீஸ் நிலையத்திற்கு வந்தார்.

ஆனால், அவர் நாடாளுமன்றத்தில் அவரது தந்தை அன்வார் இப்ராகிமின் உரையை வாசித்ததற்காக கைது செய்யப்பட்டார்.