மீண்டும் அட்டூழியம்: 500க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகளை கடத்திய தீவிரவாதிகள்

boko_kidnapped_001நைஜீரியாவில் பெண்கள் மற்றும் குழந்தைகளை போகோஹரம் தீவிரவாதிகள் கடத்தி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நைஜீரியாவில் தனி நாடு கோரி வரும் போகோஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து அரசுக்கு எதிராக பல்வேறு அட்டூழியங்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் டமாஸ்க்(Damasak) நகருக்குள் நேற்று முன்தினம் புகுந்த தீவிரவாதிகள் அங்கு இருந்தவர்களை நோக்கி திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதில் 50 பேர் பலியாகியுள்ளனர். இதன் பின்னர் இளம்பெண்கள், குழந்தைகள் உள்பட 506 பேரை கடத்திச்சென்றுள்ளனர்.

நைஜர்(Niger) மற்றும்(Chad) சாத் ராணுவத்தினர் கடந்த மாதம் தீவிரவாதிகளிடம் இருந்து மீட்டவர்களை தான், மீண்டும் தீவிரவாதிகள் கடத்திச்சென்று உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது கடத்தப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

-http://world.lankasri.com