சாபா பிகேஆரும் டிஏபியும் பாஸுடன் உறவுகளைத் துண்டித்துக் கொண்டன

sabahபக்கத்தான்  ரக்யாட்  கூட்டணி  கட்டங்கட்டமாக  உடைந்து  வருவதுபோல்  தெரிகிறது. இப்போது  சாபாவில்  பிகேஆரும் டிஏபி-யுடன்  சேர்ந்து  கொண்டு பாஸுடனான  உறவுகளை முறித்துக் கொண்டிருக்கிறது.

சரவாக்கில்  மாநில  பக்கத்தான்  ரக்யாட் கூட்டணியிலிருந்து  டிஏபி  விலகிக்  கொண்ட  ஒரு  வாரத்தில்  இது  நிகழ்ந்துள்ளது.

சாபா  பிகேஆர்,  டிஏபி  தலைவர்கள்  இன்று  பிற்பகல்  வெளியிட்ட  ஒரு  கூட்டறிக்கையில்  தங்கள்  முடிவை  அறிவித்தனர்.

தேசிய  அளவில்  டிஏபி,  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங்குடன்  எல்லா உறவுகளையும்  துண்டித்துக்  கொண்டிருக்கிறது.

“எல்லாக்  கூறுகளையும்  நடப்பு அரசியல்  நிலவரத்தையும்  கவனத்தில்  கொண்டு பாஸுடன் உறவுகளையும்  ஒத்துழைப்பையும்  முறித்துக்கொள்வதென்ற  சிரமமான  முடிவைச்  செய்திருக்கிறோம்.

“ஆனால், பக்கத்தானின்  போராட்டத்தில் பிகேஆருக்கும்  டிஏபி-க்குமிடையிலான ஒத்துழைப்பு  தொடரும்”, என  சாபா  பிகேஆர்  தலைவர்  லாஜிம்  யுகினும் சரவாக்  டிஏபி தலைவர்  ஜிம்மி  வோங்கும்  அவ்வறிக்கையில்  குறிப்பிட்டுள்ளனர்.