மகாதிர்: யாரும் நஜிப்பை நம்பவில்லை; பிஎன் தோல்வி உறுதி

dr mபிரதமர்  நஜிப்  பதவி  இறங்கினாலொழிய  அடுத்த  பொதுத்  தேர்தலில்  அம்னோவும்  பிஎன்னும்  தோல்வியுறும் என்கிறார்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்.

பிரதமர்  பதவியேற்று  ஆறு  ஆண்டுகள்  ஆகும்  வேளையில்  இதுவரை  இல்லாத  அளவுக்கு  நஜிப்மீது  மிக  மோசமான  தாக்குதலை  மேற்கொண்டிருக்கிறார் முன்னாள்  பிரதமர்.

நஜிப்  இதுவரை  அவர்மீது  சுமத்தப்பட்ட  பல்வேறு  குற்றச்சாட்டுகளுக்கு  பதில்  அளிக்கவே இல்லை. அதன்  அடிப்படையிலேயே  இந்த  முன்கணிப்பைச்  செய்வதாக  மகாதிர்  அவரது  வலைப்பதிவில்  கூறினார்.

“மக்கள்-  மலாய்க்காரர்களோ, சீனர்களோ, இந்தியர்களோ, சாபா, சரவாக்கைச்  சேர்ந்தவர்களோ- நஜிப்பை  நம்பவில்லை.

“14வது  பொதுத்  தேர்தல்வரை  நஜிப் அம்னோவுக்குத்  தலைவராக  இருந்தால்  அம்னோவும்  பிஎன்னும் தோல்வியுறும்  என்பதை  அம்னோ  உறுப்பினர்களும்  தலைவர்களும்  உணர  வேண்டும்.

“அம்னோ  ஒருமுறை  தோற்றால், அது  மீண்டும்  எழ  முடியாது”, என்று  மகாதிர்  எச்சரித்தார்.