முகைதினும் உதவித் தலைவர்களும் மகாதிருடன் பேசி நெருக்கடிக்குத் தீர்வு காண வேண்டும்

resolveடாக்டர்  மகாதிர்  முகம்மட்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பற்றிக்  கடுமையாகக்  குறைகூறி வருவதால்  அம்னோவும் அதன்  அடிநிலைத் தலைவர்களும்  கலக்கமடைந்துள்ளனர்.

அவர்களில்  ஒருவரான  செராஸ்  அம்னோ  தொகுதித்  தலைவர் சைட்  அலி  அல்ஹாப்ஷி,  இந்நெருக்கடிக்குத்  துணைப்  பிரதமரும்  உதவித்  தலைவர்களும்  தீர்வு  காண  வேண்டும்  என்று  வலியுறுத்தினார்.

தலைவர்கள்  மகாதிருடனும்  நஜிப்புடனும்  தனித்தனிக்  கூட்டங்களை  நடத்த  வேண்டும்.

“மூத்த  தலைவர்கள் இருவருக்குமிடையில்  அமைதியை உண்டுபண்ண  வழி காண  வேண்டும்”, என்றாரவர்.