பரிசாக கிடைத்த 9 வயது சிறுமி: சித்ரவதை செய்து கர்ப்பமாக்கிய 10 ஐ.எஸ் தீவிரவாதிகள்

isisrape_9yeargirl_001ஈராக் நாட்டை சேர்ந்த 9 வயது சிறுமியை கடத்தி 10 ஐ.எஸ் தீவிரவாதிகள் சித்ரவதை செய்து கர்ப்பமாக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஈராக் நாட்டில் வசிக்கும் யாஸிதி பிரிவை சேர்ந்த சுமார் 40 ஆயிரம் மக்கள் மற்றும் குழந்தைகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் எட்டு மாதங்களுக்கு முன்பு கடத்தி சென்றனர்.

இவர்களில் சுமார் 40 குழந்தைகளும் அடங்குவர். தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட அந்த குழந்தைகளில் ஒருவரான 9 வயது சிறுமியை, தாக்குதல்களில் சிறப்பாக பணியாற்றிய தீவிரவாதிகளுக்கு பரிசாக அளித்துள்ளனர்.

சிறுமியை பரிசாக பெற்ற 10 ஐ.எஸ் தீவிரவாதிகள் அவரை பாலியல் அடிமையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

பல மாதங்கள் தீவிரவாதிகளால் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது கர்ப்பம் அடைந்துள்ளதாக, அங்கு பணிபுரிந்து திரும்பிய ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை கடத்தி சென்ற யாஸிதி மக்களில் சுமார் 216 பேரை தீவிரவாதிகள் விடுதலை செய்தனர். அவர்களில் அந்த கர்ப்பமான சிறுமியும் ஒருவர்.

அந்த சிறுமியை மீட்ட குர்தீய அமைப்பு அவரை ஜேர்மனியில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

தீவிரவாத முகாமில் இருந்து திரும்பிய Yousif Daoud என்ற ஊழியர் கூறுகையில், அந்த சிறுமி மிகவும் இளம் வயதிலேயே கர்ப்பம் ஆக்கப்பட்டுள்ளதால், பிரசவ நேரத்தில் அவர் இறக்க கூட நேரிடலாம் என அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார்.

தற்போது மருத்துவமனையில் கூட அந்த சிறுமி அபாய கட்டத்திலேயே உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தீவிரவாதிகள் மீது அமெரிக்க தலைமையிலான கூட்டணி நாடுகளின் ராணுவங்கள் தாக்குதல் நடத்தி வருவதால், அதன் அழுத்தம் தாங்காமல் யாஸிதி மக்களை தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனை மறுத்த சிலர், யாசிதி மக்களை சித்ரவதை செய்து அவர்களிடமே திருப்பி அனுப்புவதால், இது அந்த சமுதாயத்தினருக்கு ஒரு பெரும் அவமானமாக இருக்கும் என்பதால் தீவிரவாதிகள் விடுதலை செய்துள்ளதாகவும் காரணம் கூறப்படுகிறது.

-http://world.lankasri.com

ஐ.எஸ் அமைப்பிற்கு முடிவு நெருங்குகிறதா? யுத்தத்தில் களமிறங்கிய சுவீடன்