கடந்த மாதம் தி எட்ஜ் பத்திரிகையின் தலைமை செயல் அதிகாரி ஹோ கே தாட் கைது செய்யப்பட்டதை அடுத்து இப்போது அதிகாரிகளின் கவனம் தி எட்ஜ் ஊடகக் குழுமத்தின் உரிமையாளர் தோங் கூய் ஒங்-மீது திரும்புவதுபோல் தெரிகிறது.
தோங்-கை வருமான வரி வாரிய (ஐஆர்பி) அதிகாரிகள் விசாரித்து வருவதாக மலேசியாகினி அறிகிறது.
ஐஆர்பி அதிகாரிகள் அதிரடிச் சோதனை ஒன்றையும் நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், எங்கு என்பதை அவை குறிப்பிடவில்லை.
தி எட்ஜ், த மலேசியன் இன்சைடர் இரண்டுமே 1மலேசியா மேம்பாட்டு நிறுவன(1எம்டிபி)த்துக்குப் பாதகமான செய்திகளை வெளியிட்டு வந்திருப்பதைச் சுட்டிக்காட்டிய அவ்வட்டாரங்கள் இந்த விசாரணை “அரசியல் நோக்கம்” கொண்டதாக இருக்கலாம் என்றன.
ஐஆர்பி பேச்சாளர் ஒருவரைத் தொடர்புகொண்டதற்கு. அவர் கருத்துரைக்க மறுத்தார். விசாரணையில் உள்ளவை பற்றிப் பேச அனுமதியில்லை என்றார்.