ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணி: இப்போது மாட் சாபு கைது செய்யப்பட்டுள்ளார்

 

Rallymatsabuமே 1 இல் நடைபெற்ற ஜிஎஸ்டி எதிர்ப்பு பேரணியில் பங்கேற்றதற்காக பாஸ் கட்சியின் துணைத் தலைவர் மாட் சாபு இன்று கைது செய்யப்பட்டார்.

விசாரணைக்கு வரும்படி போலீசார் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்து தாமாகவே டாங் வாங்கி போலீஸ் நிலையத்திற்கு காலை மணி 11.30 க்கு சென்றதாக மாட் சாபு கூறினார்.

அவரை போலீஸ் நிலையத்தில் கைது செய்து, அவர் தேச நிந்தனைச் சட்டம் 1948 இன் கீழ்PAS - Mat Sabu, Sg. Limau விசாரிக்கப்படுவார் என்று அவரிடம் கூறப்பட்டது. ஆனால், “நான் புரிந்த குற்றம் என்ன என்று எனக்குத் தெரியாது” என்றாரவர்.

“நான் இப்போது எனது வாக்குமூலம் பதிவு செய்யப்படுவதற்காக காத்திருக்கிறேன்”, என்று மாட் சாபு தெரிவித்தார்.