10 ரிங்கிட்டுக்கு 10 ரிங்கிட் முன் கட்டண அட்டை : இதுவே அமைச்சரின் விருப்பம்

shaberரிம10 முன் கட்டண அட்டைக்கு மக்கள் 10 ரிங்கிட் மட்டுமே செலுத்துவதை  உறுதிப்படுத்தப்போவதாக தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்  அஹமட்  சபரி சிக்  கூறினார்.

தொலைத்தொடர்பு  நிறுவனங்களைச்  சந்திக்கும்போது  இந்த  நிலைப்பாட்டை  முன்னிறுத்தியே  பேச்சு  நடத்தப்போவதாக  அமைச்சர்  கூறினார். அதன்  பின்னர்  அது  அமைச்சரவைக்குக்  கொண்டு  செல்லப்பட்டு  ஒரு  முடிவெடுக்கப்படும்.

“மக்களைக்  கேட்டேன். அவர்கள்  ரிம10  கொடுத்தால்  ரிம10  முன்கட்டண  அட்டை கிடைப்பதையே  விரும்புகிறார்கள்.

“இதைத்தான் மக்கள்  விரும்புகிறார்கள்  என்பதால்  அவர்கள் விருப்பமே என் விருப்பமுமாகும்”. நேற்றிரவு  ஆர்.டி.எம் 1-இல்  ஒளியேறிய  ‘சுவாரா கித்தா ஹாக் கித்தா’ நிகழ்ச்சியில் அஹமாட் சபரி  இவ்வாறு தெரிவித்தார்.