கைதிகளுக்கு வாக்களிக்கும் உரிமை கோரி அன்வார் மனு தாக்கல்

anwபெர்மாத்தாங்  பாவ்  முன்னாள்  எம்பி  அன்வார்  இப்ராகிம்,  தாம்  சிறைக்கைதியாக  இருந்தாலும்  தமக்கு  வாக்களிக்கும்  உரிமை  வழங்கக்  கோரி  நீதிமன்றத்தில் மனு  தாக்கல்  செய்துள்ளார்.

அதில்  அவர்,  குதப்புணர்ச்சிக்  குற்றச்சாட்டில்  ஐந்தாண்டு  சிறைத்தண்டனை  விதிக்கப்பட்டிருந்தாலும்  அத்தீர்ப்புக்கு  எதிராக  மனு  செய்திருப்பதாகக்  கூறினார்.

தாம்  பெர்மாத்தாங்  பாவில்  ஒரு  தகுதிபெற்ற  வாக்காளர்  என்றும் கடந்த  ஆண்டு  13வது  பொதுத்  தேர்தலில்  வாக்களித்திருப்பதாகவும்  அவர்  கூறினார்.

எனவே, தம்மை  தகுதியுள்ள  வாக்காளராக  அறிவிக்க  வேண்டும்  என  அவர்  கோரினார்.  ஒருவேளை  தம்மை வாக்களிக்க  அனுமதிக்காவிட்டால்  அதற்கு  இழப்பீடு  கொடுக்கப்பட  வேண்டும்  என்றும்  அவர்  கோரிக்கை  விடுத்தார்.

இதனிடையே  வழக்குரைஞர்  என்.சுரேந்திரன், இது சிறைக்கைதிகளுக்கு  வாக்களிக்கும்  உரிமை  உண்டா  என்பதைத்  தீர்மானிக்கும் ஒரு  சோதனை  வழக்காக அமையும்  என்றார்.

“அன்வாருக்கு  வாக்களிக்கும்  உரிமை  இல்லை  என்று  இசி  கூறுவது தவறு  என்பதுடன்  அது  அரசமைப்பு  விதிக்கும்  முரணாக  உள்ளது”, என்றாரவர்.