இடைத் தேர்தல்: போலீஸ் தலையிட்டு கட்சி ஆதரவாளர்களை அமைதிப்படுத்தினர்

poliபெர்மாத்தாங்  பாவ்  இன்று  பிற்பகல் ஒரு  மணிவரை  43 விழுக்காட்டு  வாக்காளர்கள்  வாக்களித்திருப்பதாக  தேர்தல்  ஆணையம்  கூறிற்று.

இதனிடையே, எஸ்கே  தானா லியாட்டில்  உரத்த  குரலில்  சச்சரவிட்டுக்  கொண்டிருந்த  பிஎன்  மற்றும்  பிகேஆர்  ஆதரவாளர்களைக் கட்டுப்படுத்த  எட்டு சரக்குந்துகளில்  போலீசார்  வந்திறங்கினர்.

கலகத்தடுப்பு  உடைகளுடனும்  கருவிகளுடனும்  வந்த  அவர்கள்  பள்ளியைச்  சுற்றி  வளைத்துக்  கொண்டு போட்டிக்  கட்சிகளின்  ஆதரவாளர்களைத்  தனித்  தனியே  பிரிந்து  வைத்தனர்.

சச்சரவின்போது  காயமுற்ற  சிலர்  மருத்துவமனைக்கு  அனுப்பி  வைக்கப்பட்டனர்.