‘நாம் பல்லின நாடு’ சிலுவை ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு அம்னோ நினைவுறுத்து

adnஅம்னோ  ஒரு  தேவாலயத்துக்கு  எதிராக  ஆர்ப்பாட்டம்  செய்த கட்சி  உறுப்பினர்களுக்கு  விளக்கம்  கேட்டுக்  கடிதம்  எழுதியுள்ளது.

தாமான்  மேடானில் ஏப்ரல்  19-இல்  நடந்த  ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட  அம்னோ  உறுப்பினர்களின் எண்ணிக்கை  “ஐந்துக்கும்  குறைவானது” எனக்  கட்சித்  தலைமைச்  செயலாளர்  தெங்கு  அட்னான்  தெங்கு  மன்சூர்  கூறினார்.

அவர்களுக்குக்  கட்சி  விளக்கம்  கேட்டுக் கடிதம்  அனுப்பியுள்ளதாக  அவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

“அவர்களுக்கு எழுதிய  கடிதத்தில் ‘நீங்கள்  என்ன  செய்தாலும்  இது பல்லின  நாடு  என்பதை  நினைவில்  வைத்துக்கொள்ளுங்கள்’ என்றும்  குறிப்பிட்டிருக்கிறோம். அம்னோ  இப்படிப்பட்ட செயல்களைச்  செய்வதுமில்லை, ஆதரிப்பதுமில்லை என்றும்  சொல்லி  இருக்கிறோம்”, என்றாரவர்.