குளோரின் குண்டுகளை தயாரிக்க ஆரம்பித்துள்ள ஐ.எஸ் தீவிரவாதிகளால் பெரும் பரபரப்பு !

isis-india2இதுவரை காலமும் ஐ.எஸ் தீவிரவாதிகள் ஆயுதங்களை வாங்கி சண்டையிட்டு வருகிறார்கள் என்று பலர் நினைத்துகொண்டு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் பல ரசாயன ஆயுதங்களை தயாரிக்க வல்லவர்கள் என்ற செய்தி மெல்ல மெல்ல வெளியாகி உலகை அதிரவைத்துக்கொண்டு இருக்கிறது. சமீபத்தில் சிரியாவில் அவர்கள் குளோரின் குண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளார்கள். குறித்த இடத்திற்கு சென்ற அமெரிக்க படைகள் , அக்குண்டுகளின் சிதறல்களை எடுத்து பகுப்பாய்வு செய்துள்ளார்கள்.

முதலில் இவ்வகையான குளோரின் குண்டுகளை ரஷ்யா போன்ற நாடுகள் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு கொடுத்து உதவுகிறதா என்ற சந்தேகம் இருந்து வந்தது. ஆனால் தற்போதைய பகுப்பாய்வு துல்லியமான சில தகவல்களை தந்துள்ளது. குறித்த குளோரின் குண்டுகள் , உள்ளூர் தயாரிப்பு ஆகும். இதனை ஐ.எஸ் தீவிரவாதிகளே தயாரித்துள்ளார்கள். இதனை பாவித்தால் சுவாசக் கோளாறு மற்றும் நரம்பு பாதிப்பு ஏற்பட்டு எதிரிகள் இறப்பார்கள்.

-http://www.athirvu.com