‘டர்ட்டி பாம்’… அணு குண்டு தயாரிக்கும் அளவிற்கு பலமான ஐஎஸ்ஐஎஸ்… உலக நாடுகள் பீதி!

isis_irakசிட்னி: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பு அணு குண்டு தயாரிக்கும் அளவுக்கு பலமாகி இருப்பதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. டர்ட்டி பாம் என்று அணுகுண்டுக்கு அவர்கள் பெயரிட்டுள்ளனர். மனித ரத்த வெறி பிடித்து செயல்படும் ஐஎஸ் அமைப்பு பல்வேறு வகையான ஆயுதங்களை ஏற்கனவே வைத்துள்ளது. கிட்டத்தட்ட ராணுவம் போல அவர்கள் செயல்பட்டு வருகின்றனர். ஏற்கனவே ஈராக், சிரியாவில் உள்ள அரசு ராணுவ ஆய்வகங்களிலிரு்து அவர்கள் கதிர்வீச்சுத் தன்மை கொண்ட வேதிப் பொருட்களை திருடியுள்ளதாக தகவல்கள் உள்ளன. அவர்றை வைத்து குண்டுகளைத் தயாரிக்க முடியும் என்று ஆஸ்திரேலிய உளவுப் பிரிவு அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்னர்.

இந்த நிலையில் டர்ட்டி பாம், அதாவது அணுகுண்டு தயாரிக்கப் போவதாகவும், விரைவில் அது நிறைவேறும் என்றும் ஐஎஸ் ஆதரவு பத்திரிகையான தபிக் செய்தி வெளியிட்டுள்ளது. ஒன்று அவர்களாகவே செய்வார்கள் அல்லது வேறு எங்கிருந்தாவது வாங்குவார்கள் என்றும் அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

 

மிகவும் அபாயகரமான அணுகுண்டைத் தயாரிக்கும் அளவுக்கு இந்தத் தீவிரவாதிகள் வல்லமை பெற்றிருப்பது உலக நாடுகளை குறிப்பாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

இதுகுறித்து இன்டிபென்டென்ட் இதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ‘தீவிரவாதிகளின் நோக்கம் உண்மையிலேயே புரியவில்லை. இதுகுறித்து தீவிர அச்சம் கொள்ளப்பட வேண்டியது அவசியமாகும்.ரசாயான ஆயுதங்களைத் தயாரிக்கத் தேவையான வேதிப் பொருட்களை அது உலகம் முழுவதும் உள்ள தனது தொண்டர்கள் மற்றும் வீரர்கள் மூலம் ரகசியமாக சேகரித்தும் வருகிறது’ என்று ஆஸ்திரேலிய வெளியுரவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப்பும் தெரிவித்துள்ளார்.

ஐஎஸ் அணு குண்டு தயாரி்க்கும் நிலையில் இருப்பதாக வெளியாகியுள்ள செய்திகளைத் தொடர்ந்து மேற்கத்திய நாடுகள் அவசர ஆலோசனைகளில் குதித்துள்ளனவாம்.