பூமிக்கு வந்த வேற்றுகிரகவாசிகள்: ஆதாரங்களை வெளியிட்ட அமெரிக்க உளவுத்துறை

fb_asicon_001அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான எப்பிஐ வேற்று கிரகவாசிகள் பூமியில் இறங்கியதாக கூறி அதற்கான ஆவணங்களை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு அடிக்கடி வந்துள்ளதாக பல காலங்களாக கூறப்படுகிறது.

அதற்காக ஆராய்ச்சிகள் கூட நடைபெற்றுவருகின்றன. எனினும் இதற்கான வலிமையான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை.

இந்நிலையில் அமெரிக்காவின் அமெரிக்காவின் உளவுத்துறை அமைப்பான எப்பிஐ வேற்று கிரகவாசிகள் பூமியில் இறங்கியதாக கூறி அதற்கான ஆவணங்களை தனது vault.fbi.gov இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அந்த ஆவணங்களில் உள்ள முக்கிய அம்சங்கள்:

1) பறக்கும் தட்டுக்கள் குழுவாக பூமிக்கு வருகிறது. மற்றவர்கள் தொலை கட்டுபாட்டின் கீழ் உள்ளனர் (under remote control)

2) அவர்களின் குறிக்கோள் அமைதியானதாக உள்ளது.வந்தவர்கள் விமானத்தை நிலை நிறுத்த ஆழ்ந்து சிந்திக்கின்றனர்.

3) வந்தவர்கள் உருவத்தில் மனிதர்களைப் போல் உள்ளனர். ஆனால் மிகப்பெரிய வடிவில் உள்ளனர்.

4) அவர்கள் பூமியில் உள்ள மனிதர்களை தவிர்க்க வில்லை. ஆனால் அவர்கள் தங்களது சொந்த உலகத்தில் இருந்து வந்து உள்ளனர்.

5) அவர்கள் பூமியை பயன்படுத்தி கொள்ள இங்கு வரவில்லை.ஆனால் அவர்கள் எந்த கிரகத்தில் இருந்து வந்து உள்ளார்கள் என்பது அறியகூடிய வகையில் இல்லை.

6) அவர்கள் வந்த பறக்கும் தட்டுகள் கதிரியக்க ஆற்றல் அல்லது ஒருவகை கதிர் வீச்சை பெற்றிருக்கின்றன. அதன் மூலம் தாக்கவரும் எந்தவிதமான கருவிகளை எளிதில் உடைக்ககூடியது.

அவர்கள் தங்கள் விருப்பப்பட்ட போது பூமியில் உள் நுழைவார்கள். மேலும் வந்த சுவடே இல்லாமல் சாதாரணமாக நம் பார்வையில் இருந்து மறைந்து விடுவர்.

7)அவர்களை ரேடியோ மூலமாகவோ ராடார் மூலமாகவோ அவர்கள் இயந்திரத்தை அடைய முடிய வில்லை.

மேலும் அவர்களது வாகனம் ஓவல் வடிவில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வெப்பத்தை தாங்கி கொள்ளும் உலோக குழல் வடிவத்தில் உள்ளது. இன்னும் முன் பகுதி கூண்டு கட்டுப்பாடுகள் அறியப்படவில்லை. நடுவில் பரிசோதனைகூடம் உள்ளது. பின்புறம் போர் தளவாடங்களை கொண்டு உள்ளது.அவை அடிப்படையில் ஒரு சக்தி வாய்ந்த ஆற்றல் இயந்திரத்தை, கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-http://world.lankasri.com