தவறுதலாக அழுத்தப்பட்ட பொத்தான்: பலியான பெண் மனித வெடிகுண்டுகள்

su_suicon_001நைஜீரியாவில் தவறுதலாக குண்டு வெடித்ததில் மனித வெடிகுண்டுகளான மூன்று பெண்கள் பலியாகினர்.

நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் சரிசமமாக வாழுகின்றனர்.

எனினும் முஸ்லிம் ஆட்சியை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அங்குள்ள போகோ ஹராம் தீவிரவாதிகள் நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து ஏராளமான மாணவிகள், சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி வைத்துள்ள அவர்கள் அரசுக்கு நிபந்தனை விதித்துள்ளனர்.

மேலும் நாட்டின் பல பகுதிகளில் அடுக்கடுக்காக மனித வெடிகுண்டு தாக்குதல்களையும் நடத்தி பொதுமக்களை கொன்று குவித்து வருகின்றனர்.

இவர்களது தற்கொலை படையில் பல பெண்களும் இணைந்து மனித வெடிகுண்டுகளாக நடமாடி வருகின்றனர்.

இந்நிலையில் உடலில் வெடி குண்டுகளை கட்டிக் கொண்டு மைடுகுரி நகரின் ஒரு பகுதியில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று பெண்கள்

சென்று கொண்டிருந்தனர்.

ஆனால் போகும் வழியில் ஒரு பெண்ணின் கை தவறுதலாக வெடிகுண்டை இயக்கும் பொத்தானை அழுத்திவிட, மூன்று பெண்களுமே உடல் சிதறி பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

-http://world.lankasri.com