அமெரிக்கா-ரஷ்யா இடையே பனிப்போர் மூளுமா? புடின் அறிவிப்பால் பரபரப்பு

putin_america_001அதிநவீன கண்டம் விட்டு கண்டம் பாயும் அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும் என்ற விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.

ரஷ்ய எல்லையின் அருகில் உள்ள நேட்டோ நாடுகளில் டேங்கர்கள் மற்றும் பாரிய அளவில் ஆயுதங்களை குவிக்கவேண்டும் என்று ரஷ்யாவுடன் ஏற்பட்ட பனிப்போர் காலத்தில் இருந்தே அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது.

இந்நிலையில் உக்ரேன் விவகாரத்துக்கு பிறகு ரஷ்யாவை ஒட்டியுள்ள ஐரோப்பாவின் கிழக்கு பகுதிகளில் தங்களது ஆயுதங்களை சேமித்து வைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஆனால் அமெரிக்காவின் இந்த திட்டத்துக்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நேற்று மாஸ்கோ அருகில் நடந்த ராணுவ தளவாடங்கள் கண்காட்சியில் பேசிய புடின் ”இந்த ஆண்டு புதிதாக 40-க்கு மேற்பட்ட அதிநவீன அணு ஆயுத ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்படும்.

இந்த ஏவுகணைகள் அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய நவீன ஏவுகணை எதிர்ப்புகளை சமாளிக்கும் திறனுடன் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மூலம் அமெரிக்கா – ரஷ்யா இடையே மீண்டும் பனிப்போர் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

-http://world.lankasri.com