பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூர் ஆகியோர்மீதும் மேலும் எழுவர்மீதுமான ரிம1.9மில்லியன் இழப்பீட்டு வழக்கை விசாரணைக்கு ஏற்க வேண்டும் என பி.பாலசுப்ரமணியத்தின் விதவை மனைவி கூட்டரசு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.
அந்த வழக்கை நிலைநிறுத்த ஏ.செந்தமிழ்ச் செல்விக்கும் அவரின் இரண்டு பிள்ளைகளுக்கும் இதுவே இறுதி வாய்ப்பாகும் .ஏற்கனவே கோலாலும்பூர் உயர் நீதிமன்றமும் முறையீட்டு நீதிமன்றமும் அவரது வழக்கை விசாரணைக்கு ஏற்பதற்கில்லை என நிராகரித்து விட்டன.
இந்த முறை வெற்றி பெற இறைவனை இறைஞ்சுகிறேன்,
இந்த முறை வெற்றி பெற இறைவனை இறைஞ்சுகிறேன்,
நாட்டின் நீதி பரிபாலனம் மக்களவை நேரடிப் பார்வையின் கீழ் வரும் வரையில், இந்த வழக்கில் நீதி தேவதை செத்தவளே!!!
நீதி தேவன் எங்கோ தூங்கி கொண்டிருக்கிறான் -தேசிய முன்னணியின் பணக்காரனின் வீட்டில்.
உண்மை எது பொய் எது ஒன்னும் புரியல, நம்ப கண்ணால நம்ப முடியல. தொடரட்டும் உங்கள் போராட்டம்.
தியோ பெங் ஹோக் மரணம் காரணமாக, அதன் மர்ம முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு, தனது ஒட்டுமொத்த இயந்திரத்தையே பயன்படுத்தியது டி.எ.பி. ஆனால், அநீதி இழைக்கப்பட்ட இந்த பாலசுப்ரமணிய விவகாரத்தை ஏறெடுத்தும் பார்க்கவில்லை டி.எ.பி. டி.எ.பி.யில் இனப்பாகுபாடு எப்படி தலைவிரித்தாடுகிறது பாருங்கள்.
அம்மணி பார்த்து ..இந்த மாங்கா கூட்டனி நம்பி ஆப்பு ஆகிவிடாதே….அவனுங்க தண்ட சோறு …இரண்டு பிள்ளைகள் இருக்கு அதற்க்கு எதிர்காலம் இருக்கு…