நஜிப்புக்கு எதிரான வழக்கை விசாரணைக்குக் கொண்டுவர பாலாவின் துணைவியார் மீண்டும் முயற்சி

snthamizhபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக், அவரின்  துணைவியார்  ரோஸ்மா  மன்சூர்  ஆகியோர்மீதும்  மேலும்  எழுவர்மீதுமான    ரிம1.9மில்லியன்  இழப்பீட்டு  வழக்கை விசாரணைக்கு  ஏற்க  வேண்டும்  என  பி.பாலசுப்ரமணியத்தின்  விதவை மனைவி  கூட்டரசு  நீதிமன்றத்தில்  மனு  செய்துள்ளார்.

அந்த  வழக்கை  நிலைநிறுத்த  ஏ.செந்தமிழ்ச்  செல்விக்கும்  அவரின்  இரண்டு  பிள்ளைகளுக்கும்  இதுவே இறுதி வாய்ப்பாகும் .ஏற்கனவே  கோலாலும்பூர்  உயர்  நீதிமன்றமும்   முறையீட்டு  நீதிமன்றமும் அவரது  வழக்கை  விசாரணைக்கு  ஏற்பதற்கில்லை  என  நிராகரித்து  விட்டன.