சூரியனை மிக அருகில் படம்பிடித்து அதன் புகைப்படங்களை நாசா ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ளது.
கடந்த 2010 ஆம் ஆண்டு, அட்லஸ் 5 ராக்கெட் மூலம் சோலார் டைனமிக்ஸ்(Solar Dynamics) தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த தொலைநோக்கி அதிநவீன கமெராக்கள் மூலம் பல்வேறு புகைப்படங்களை எடுத்து அனுப்பி வருகிறது.
இந்நிலையில் மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் விதமாக, சூரியனை பல்வேறு கோணத்தில் படம்பிடித்து அனுப்பியுள்ளன.
சூரியனில் நடைபெறும் நிகழ்வுகள், கொந்தளிப்புகள் போன்றவற்றை இந்த புகைப்படங்கள் மக்களுக்கு எடுத்துரைக்கின்றன.
மேலும், இந்த தொலைநோக்கி, சூரியனில் உள்ள பல ஆயிரம் மடங்கு வலிமை மிகுந்த காந்தப்புலமான பிளாஸ்மா வளையங்களை துல்லியமாக படம் பிடித்து அனுப்பியுள்ளது.
இந்த காந்தப்புலங்களிலிருந்து சூடான வாயுக்கள் வெளியேறுகின்றன, அதன் பின்னர் பிரகாசமான வெளிச்சம் தோன்றும் காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் மக்களுக்கு பயனுள்ளவையாக இருக்கும் என கோடார்ட் விண்வெளி மைய அதிகாரி டாக்டர் அலெக்ஸ் யங்(Alex Yung) கூறியுள்ளார்.
-http://world.lankasri.com
சூரியன்தான் கடவுள் என்று சொல்லிக் கொண்டிருந்த மதங்களில் நம்பிக்கையை அவநம்பிக்கையாக்கி விட்டார்கள் இந்த நாசகாரிகள்!.
எந்த ஒன்றை இழந்தால் , உயிர் வாழ முடியாதோ ,அதுவே ஒரு பாமரனுக்கு கடவுள் .உன்னை நீ அறியாத போது,உலகை அறிந்து என்ன பயன் .உயிர் காற்று அளிக்கும் விருட்சம் ,ஒரு கடவுள் .
அறிவியல் வளர்கிறது ! அதன் விளைவுதான் நாசாவின் இந்த புதிய கண்டுபிடிப்பும் படங்களும். சூரியனைக் கடவுள் என்று சொல்லும் நம்பிக்கையில் அவர்கள் கைவைத்ததாக ஒன்றும் தெரியவில்லையே.மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படும் நாசாவிற்கு நாசகாரிகள் என்ற பட்டம் தேவைதானோ !
“நாசகாரிகள்!”. பக்கத்தில் ஆச்சரியக்குறி போட்டதால் எமக்கும் இந்த சூரியன்தான் கடவுள் என்பதில் நம்பிக்கை இல்லை என்பதை நாசுக்காக உணர்த்தினேன். கடவுள் கோள்களையும் படைத்து அனைத்தையும் இரட்சித்து காப்பவனாகத்தான் இருக்க முடியும். எந்த ஒரு சடப் பொருளும் கடவுள் இலக்கணத்திற்கு தகுதி உடையற்றதாகின்றது. இதில் சூரியனும் அடங்கும். இவ்வளவு நமக்குத் தெரிந்தும், நம்மவர்கள் நவகிரகத்தைச் சுற்றி வந்து குருபெயர்ச்சிக்கும், சனிபெயர்ச்சிக்கும் யாகம் வளர்த்து தமக்கு வரும் தீங்கை போக்கிக் கொள்கின்றோம் என்று இந்து மத வியாபாரிகள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொண்டு அந்த வழிபாட்டிலும் இருப்பது அல்லவா நமக்கு ஆச்சரியத்தை கொடுக்கின்றது. தமிழன் அறிவாளியா?