பெர்காசா: மாரா மோசடி குரங்குகளைத் தண்டிக்க வேண்டும்

erமெல்பர்னில் மாரா அதிக  விலைகொடுத்து  சொத்து  வாங்கியதாகக்  கூறப்படுவது  குறித்து  பெர்காசா  மலேசிய  ஊழல்-தடுப்பு  ஆணையத்திடம்(எம்ஏசிசி)  புகார்  செய்துள்ளது.

பூமிபுத்ராக்களின்  உரிமைகள்  மருட்டலுக்கு  இலக்காகும்போது  அதைப்  பார்த்துக்  கொண்டிருக்க  முடியாது  என்று  பெர்காசா  தலைவர்  அஸ்ருல்  அக்மால் ஸஹாருடின்  கூறினார்.

அக்குற்றச்சாட்டு  பொய்யென்று  தெரிய வந்தால் அதைப்  பரப்பியவர்கள்மீது   நடவடிக்கை  எடுக்கப்பட  வேண்டும்.

“அதே  வேளை  அது  உண்மை  என்றால்  சம்பந்தப்பட்ட ‘குரங்குகளை’, மாரா  உயர்  அதிகாரிகள், ஒரு  முன்னாள்  அரசியல்வாதி  உள்பட கடுமையாக தண்டிக்க  வேண்டும்.

“ஏனென்றால்  அவர்கள்  செய்தது ஒரு  குற்றச்செயல்  மட்டுமல்ல. அது  மலாய்க்காரர்கலுக்கும்  பூமிபுத்ராக்களுக்கும்  இழைக்கப்பட்ட  துரோகமுமாகும்”, என்று  அஸ்ருல் கூறினார்.