அம்பிகா: அரசியலா? நன்றி. வேண்டவே வேண்டாம்

ambiவழக்குரைஞர்  மன்ற  முன்னாள்  தலைவர்  அம்பிகா  ஸ்ரீநிவாசன், டிஏபி-இல்  சேருமாறு  தமக்கு  அழைப்பு  விடுத்த  தேசிய  இலக்கியவாதி  ஏ. சமட்  சைட்டுக்கு  நன்றி  தெரிவித்தார். ஆனால்,  அரசியல்  தமக்குரிய  பாதை  அல்ல  என்றவர்  மறுதலித்தார்.

“இந்நாட்டில்  அரசியல்  ஈடுபட  அவருக்குள்ள  துணிச்சல்  எனக்கு  இல்லை.

“பாக்  சமட்டுக்கும்  டிஏபி-க்கும்  நன்றி. நமக்கு  என்ஜிஓ-தான் சரி”, என  அம்பிகா  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

அம்பிகா,  பாக்  சமட்  இருவருமே, சுயேச்சையான, நியாயமான  தேர்தலுக்காக  போராடும்  பெர்சே  அமைப்பின்  முன்னாள்  இணைத்  தலைவர்களாவர்.

பாக்  சமட்  கடந்த  மாதம்  டிஏபி-யில்  இணைந்தார். அப்போது  அவர்  அம்பிகாவையும்  அக்கட்சியில்  சேருமாறு  அழைத்தார்.