பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் பணக் கையாடல் செய்தார் என்ற குற்றச்சாட்டை அரசாங்கம் மறுத்திருப்பது பாராட்டுக்குரியது என்று கூறிய அம்னோ எம்பி ஒருவர், அதைவிட இவ்விவகாரத்தில் மத்திய வங்கியும் எம்பேங்கும் நிலைமையைத் தெளிவுபடுத்துவதுதான் முக்கியம் என்றார்.
“பிரதமர் அலுவலகம், 1எம்டிபி, ஆகியவையும் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புள்ள பல நிறுவனங்களும் மறுப்புத் தெரிவித்துள்ளன. ஆனால், பேங்க் நெகாராவோ எம்பேங்கோ இதுவரை தெளிவான அறிக்கை எதையும் வெளியிடவில்லை. இது பொதுமக்களிடையே குழப்பத்தை உண்டுபண்ணியுள்ளது”, என கப்பளா பத்தாஸ் எம்பி ரீஸால் மரைக்கான் நைனா மரைக்கான் கூறினார்.
எனவே, அதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றவர் கேட்டுக்கொண்டார்.
“மறுத்திருப்பது பாராட்டுக்குரியது” என்று சொல்லி விட்டு கூடவே “மத்திய வங்கியும் எம்பேங்கும் நிலைமையைத் தெளிவுபடுத்துவதுதான் முக்கியம்” என்று கூறுவதில் இருந்து பிள்ளையைக் கில்லி விட்டு தொட்டிலையும் ஆட்டுவிகின்ராரோ மரைக்கார் என்ற டவுட் வருது!.