அம்னோ எம்பி: பேங்க் நெகாரா குழப்பத்தைத் தெளிவுபடுத்த வேண்டும்

mpபிரதமர்  நஜிப் அப்துல் ரசாக்  பணக் கையாடல்  செய்தார்  என்ற  குற்றச்சாட்டை  அரசாங்கம்  மறுத்திருப்பது  பாராட்டுக்குரியது  என்று  கூறிய  அம்னோ  எம்பி  ஒருவர்,  அதைவிட  இவ்விவகாரத்தில்  மத்திய வங்கியும்  எம்பேங்கும்  நிலைமையைத்  தெளிவுபடுத்துவதுதான்  முக்கியம்  என்றார்.

“பிரதமர்  அலுவலகம், 1எம்டிபி, ஆகியவையும் குற்றச்சாட்டுகளுடன்  தொடர்புள்ள  பல  நிறுவனங்களும்  மறுப்புத்  தெரிவித்துள்ளன. ஆனால்,  பேங்க்  நெகாராவோ  எம்பேங்கோ  இதுவரை  தெளிவான  அறிக்கை  எதையும்  வெளியிடவில்லை. இது  பொதுமக்களிடையே  குழப்பத்தை  உண்டுபண்ணியுள்ளது”, என  கப்பளா  பத்தாஸ் எம்பி  ரீஸால்  மரைக்கான்  நைனா  மரைக்கான்  கூறினார்.

எனவே, அதைத்  தெளிவுபடுத்த  வேண்டும்  என்றவர் கேட்டுக்கொண்டார்.