நாடாளுமன்றம் சிறப்புக் கூட்டத்தை நடத்தி 1எம்டிபி ஊழல் பற்றி விவாதிக்க வேண்டும் என்கிறார் கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு.
மற்ற அரசாங்க அமைப்புகளின்மீது நம்பிக்கை குறைந்து வரும் வேளையில், மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா விரும்புவதுபோல், நாடாளுமன்றம் சுயேச்சையாக இயங்குவதை நிறுவ இதுவே தருணமாகும் என்றாரவர்.
“மலேசியர்களுக்கு போலீஸ், எம்ஏசிசி போன்ற நிறுவனங்கள்மீது நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.
“எனவே, இந்த விவகாரம் பற்றி விவாதிக்கவும் மலேசியாவுக்கு உகந்த அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவுசெய்யவும் அவசரகால அடிப்படையில் நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என நினைக்கிறேன்.
“பண்டிகார், நாடாளுமன்றத்தைச் சீரமைக்க நினைத்தால் அதற்கு இதுவே சரியான தருணம்”, என சந்தியாகு கூறினார்.
அவர் அப்படி செய்யவே மாட்டார்…. என்னம்ம்மா இப்படி பண்றேங்கேளேம்மா..
உங்களால எனக்கு பிரச்னை மேல் பிரச்னை மா