‘1எம்டிபி பற்றி விவாதிக்க நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவீர்’-எம்பி கோரிக்கை

snanநாடாளுமன்றம்   சிறப்புக்  கூட்டத்தை  நடத்தி  1எம்டிபி ஊழல்  பற்றி  விவாதிக்க  வேண்டும்  என்கிறார்  கிள்ளான்  எம்பி  சார்ல்ஸ்  சந்தியாகு.

மற்ற  அரசாங்க  அமைப்புகளின்மீது  நம்பிக்கை  குறைந்து  வரும்  வேளையில்,  மக்களவைத்  தலைவர்  பண்டிகார்  அமின்  மூலியா  விரும்புவதுபோல்,  நாடாளுமன்றம்  சுயேச்சையாக இயங்குவதை  நிறுவ இதுவே  தருணமாகும்  என்றாரவர்.

“மலேசியர்களுக்கு  போலீஸ், எம்ஏசிசி  போன்ற  நிறுவனங்கள்மீது  நம்பிக்கை  இல்லாமல்  போய்விட்டது.

“எனவே, இந்த  விவகாரம்  பற்றி  விவாதிக்கவும் மலேசியாவுக்கு உகந்த  அடுத்த  கட்ட  நடவடிக்கை பற்றி  முடிவுசெய்யவும்  அவசரகால அடிப்படையில் நாடாளுமன்றக்  கூட்டத்தைக்  கூட்ட  வேண்டும்  என  நினைக்கிறேன்.

“பண்டிகார், நாடாளுமன்றத்தைச்  சீரமைக்க  நினைத்தால் அதற்கு  இதுவே  சரியான  தருணம்”, என  சந்தியாகு  கூறினார்.