தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் பூரண அதிகாரப் பகிர்வினை கோருகின்றது!

suresh_prem_001எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் பூரண அதிகாரப் பகிர்வினை கோருவதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களை ஒன்றிணைத்து பூரண அதிகாரப் பகிர்வு தமிழ் மக்களுக்கு அவசியமானது என தமி;ழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது.

நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கியுள்ளார்.

வவுனியாவில் நடைபெற்ற கூட்டத்தில் தேர்தல் விஞ்ஞாபனம் குறித்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளன.

தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிச் செய்றபாட்டாளர்களை விடுதலை செய்தல், காணாமல் போனவர்கள் தொடர்பில் நடவடிக்கை எடுத்தல், இடம்பெயர் மக்களை மீள்குடியேற்றுதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் வெளியிட்டுள்ளது.

– tamilwin.com

TAGS: