முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் இன்று 90வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் யார் உடன் இருப்பார்களோ இல்லையோ 59ஆண்டுகளாக அவரது வாழ்வின் ஒளியாக இருந்துவரும் சித்தி ஹஸ்மா அலி மட்டும் கண்டிப்பாகக் கூட இருப்பார்.
பிறந்த நாளுக்காக கணவருக்குச் சிறப்புப் பரிசு கொடுத்து ஆச்சரியப்பட வைக்கும் எண்ணமெல்லாம் அவருக்குக் கிடையாது.
“அவருக்கு எதுவும் வாங்கிக் கொடுக்க நினைக்கவில்லை. வேண்டியதெல்லாமே அவரிடம் இருக்கின்றன.
“அவரிடம் கடிகாரங்கள், பேனாக்கள் எல்லாமே இருக்கின்றன. அதுதான் வேறு எதுவும் தேவையில்லை என்றேன்”, என சித்தி ஹஸ்மா மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
அப்படியானால் பிறந்த நாள் பரிசாக என்னதான் கொடுப்பார்?
ஒரு சிறிய விருந்து அத்துடன் கணவரின் போராட்டம் முடிவடைய வேண்டும் என்ற பிரார்த்தனை- இதுதான் மகாதிருக்கு சித்தி ஹஸ்மாவின் பிறந்த நாள் பரிசு.
மகாதிர் உடலாலும் மனத்தாலும் நலமே வாழ பிரார்த்தனை செய்யப்போவதாக அவர் கூறினார்.
“அத்துடன் அவரது போராட்டம் முடிவுக்கு வர வேண்டும் என்றும் பிரார்த்திப்பேன். அது எப்படி முடியப் போகிறது என்பது எனக்குத் தெரியாது”, என்றாரவர்.
இன்று மகாதிர் 90வது பிறந்தாளைக் கொண்டாடுகிறார். இன்னும் இரண்டு நாளில் சித்தி ஹஸ்மா அவரது 89வது பிறந்த நாளைக் கொண்டாடுவார்.
உங்கள் கணவரின் போராட்டம் முடிவுக்கு வரவேண்டும் என்றால், உங்கள் கணவரைப் போன்றே நஜிப்பும் அரசியல் நடத்தியாக வேண்டும். ஆமாங்க! உங்கள் கணவர், அவரை எதிர்த்தவர்கள் அனைவரையும் சிறையில் அடைத்தார். [1987ல் அக்டோபர் மாதம், ‘ஒப்பராசி லாலாங்’ என்ற பெயரில் 106 தேசியத் தலைவர்களை சிறையிலே அடைத்தார்] அதேபோன்று உங்கள் கணவரை இந்த அல்தாந்துயா நஜிப் சிறையில் அடைக்கவேண்டும். அதோடு சரி. உங்கள் கணவரின் போராட்டம் சிறையிலேயே ஒரு ‘முடிவுக்கு’ வந்துவிடும். எப்படிங்க வசதி?
உங்க கணவர் ரொம்ப நல்லவரு! அவருடைய போராட்டம் ஒரு முடிவுக்கு வர பிராத்திப்பேன்! கேட்பதற்கு ரொம்ப நல்லாயிருக்கு?ஹி ஹி ஹி ஹி போங்கடி !!!,,,,,,,,
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்று கேள்வி பட்டதில்லையா?
இன்றைக்கே வந்தாலும் நாடும் மக்களும் சொந்த நலனில் அக்காரை உள்ள ஒரு சுயனலவாதியிடம் இருந்து தப்பித்த நிம்மதியில் பெர்முச்சு விடும்.
இந்த கிழவன் உமக்கும் உன் குடும்பத்திற்கும் போராடுகிறான். உமக்கு புரியவில்லை என்றால் உன் மகளிடம் பொய் கேள்.
உங்கள் கணவருக்கு தான் எல்லா விசயங்களிலும் மூக்கை நுழைக்கும் கொடூர நோய் பிடித்து உள்ளது அப்படி செய்யவில்லை என்றால் mums kuddikku தூக்கம் வராது .