வால் ஸ்திரிட் ஜர்னலின் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெளிவான விளக்கம் கொடுக்காவிட்டால் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக மாணவர் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
நஜிப் மூன்று முக்கிய கேள்விகளுக்குப் பதில் அளிக்க வேண்டும் என கெராக்கான் மஹாசிஸ்வா செலாமாட்கான் மலேசியா-வின் தலைவர் முகம்மட் லுக்மான் நூல் ஹகிம் சுல் ரசாலி கூறினார்.
அக்கேள்விகளாவன:
• வங்கிக் கணக்குகள் அவருடையவையா?;
• 1எம்டிபி- இலிருந்து ரிம2.6 பில்லியன் அவருடைய கணக்குக்கு மாற்றிவிடப்பட்டதா?;
• அவருடைய சொத்து மதிப்பு என்ன?
“இக்கேள்விகளுக்குப் பிரதமர் விளக்கம் அளிக்கத் தவறினால் அரசாங்கத்தைக் கவிழ்க்க பொது ஆர்ப்பாட்டமொன்றை ஏற்பாடு செய்யத் தயங்க மாட்டோம்”, என லுக்மான் கூறினார்.
இன்று புத்ரா ஜெயாவில் மாணவர் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்திய பின்னர் அவரும் மற்ற மாணவர் தலைவர்களும் செய்தியாளர்களிடம் பேசினர்.
இதற்கெல்லாம் பிரதமர் அசரமாட்டார்!
பிரதமர் அல்தாந்துயா நஜிப்பை, மகாதிமிர் ‘சீண்டிப்’ பார்த்தார். நஹீ! எதிர்கட்சியினர் ‘கிண்டிப்’ பார்த்தனர். நஹீ! இப்போது மாணவர்கள் ‘முண்டிப்’ பார்கின்றனர். பார்ப்போமே!
இதுபோன்ற கடுமையான குற்றச்சாட்டுகள் பிரதமருக்கு எதிராக தாயிலாந்து.இந்தொநேசியவாக இருந்தால் மக்கள் தெரிவில் இறங்கியிருப்பார்கள்.முன்னுதாரணம் உண்டு.டத்தோ அம்பிகா பெர்செவிலிருந்து விலகியதும் அது சக்தியை இழந்தது.இந்த மாணவர்களின் ஆர்ப்பாட்டம் பிசுபிசுத்து போயிடும்.பொகச்செயிடுடுவார் ஐஜிபீ.காலிட்.
கேள்விகளுக்கு பதில் கூர மறுத்தால் அரசாங்கத்தை கவிழ்க்க தயங்க மாட்டோம் என்று மிரட்டல் விடுகபத்டிருகிறது ஐ ஜி பி இவ்வர்களின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?அரசாங்கத்துக்கே சவால்! ஐ ஜி பி காவல் துறைக்கே சவால்!பாப்போம் என்ன நடக்குது என்று.
அவர் இப்பொழுது பேசா மடந்தயாகிவிட்டார் $$$$$$$$$$$$$
குலைக்கிற நாய் கடிக்காது.