பிரதமர் தொடர்ந்து மெளனம் சாதித்தால் ஆர்ப்பாட்டம் செய்யப்போவதாக மாணவர்கள் மிரட்டல்

studentவால் ஸ்திரிட்  ஜர்னலின்  குற்றச்சாட்டுகளுக்கு  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  தெளிவான விளக்கம்  கொடுக்காவிட்டால்  ஆர்ப்பாட்டம்  நடத்தப்போவதாக  மாணவர்  தலைவர்கள்  எச்சரித்துள்ளனர்.

நஜிப்  மூன்று  முக்கிய  கேள்விகளுக்குப்  பதில்  அளிக்க  வேண்டும்  என கெராக்கான்  மஹாசிஸ்வா  செலாமாட்கான்  மலேசியா-வின்  தலைவர்  முகம்மட்  லுக்மான்  நூல்  ஹகிம் சுல்  ரசாலி  கூறினார்.

அக்கேள்விகளாவன:
• வங்கிக்  கணக்குகள்   அவருடையவையா?;

• 1எம்டிபி- இலிருந்து ரிம2.6 பில்லியன்  அவருடைய  கணக்குக்கு  மாற்றிவிடப்பட்டதா?;

• அவருடைய  சொத்து  மதிப்பு  என்ன?

“இக்கேள்விகளுக்குப்  பிரதமர் விளக்கம்  அளிக்கத்  தவறினால்  அரசாங்கத்தைக்  கவிழ்க்க  பொது ஆர்ப்பாட்டமொன்றை  ஏற்பாடு  செய்யத்  தயங்க  மாட்டோம்”, என  லுக்மான்  கூறினார்.

இன்று  புத்ரா  ஜெயாவில்  மாணவர்  ஆர்ப்பாட்டம்  ஒன்றை  நடத்திய  பின்னர்  அவரும்  மற்ற  மாணவர்  தலைவர்களும்  செய்தியாளர்களிடம்  பேசினர்.