1எம்டிபி: கைதான இயக்குனர் எங்களைச் சேர்ந்தவர் அல்லர்

remand1எம்டிபி  மீதான  சிறப்பு  விசாரணைக்  குழுவால்  தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்  நிறுவன  இயக்குனர்   அந்த  நிறுவனத்தைச்  சேர்ந்தவர்  அல்லர்  என்று  நிதி  அமைச்சுக்குச்  சொந்தமான அந்த  நிறுவனம்  தெரிவித்துள்ளது.

“நிறுவன இயக்குனர்  ஒருவர்  புலனாய்வுக்  குழுவின்  விசாரணைக்காக  தடுத்து  வைக்கப்பட்டிருக்கும்  ஊடகச்  செய்திகளை  1எம்டிபி-யும்  கவனித்தது.

“1எம்டிபி  ஊழியர் எவரும்  கைதாகவில்லை”, என  அந்நிறுவனத்தின்  அறிக்கை  ஒன்று  கூறியது.

1எம்டிபி  அதன்மீது  விசாரணை  நடத்தும்  அதிகாரிகளுடன்  முழுமையாக  ஒத்துழைக்கும்  என்றும் அந்த  அறிக்கை  கூறிற்று.