லைபீரியா நாட்டின் தீவு ஒன்றில் ஆராய்ச்சிக்காக கொண்டு செல்லப்பட்ட குரங்குகள் உணவு இல்லாமல் தவித்துவருகின்றன.
அமெரிக்காவின் நியூயொர்க் இரத்த ஆராய்ச்சி நிலையம் கடந்த 1974ஆம் ஆண்டு ஆராய்ச்சி நிலையம் அமைப்பது தொடர்பாக லைபீரியா நாட்டுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டது.
அதன்படி அந்நாட்டின் அடர்ந்த காடுகளில் குரங்குகளை வைத்து ஆராய்ச்சி மேற்கொண்டது.
இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு இதை கைவிட்டது. மேலும் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து இந்த மனித குரங்குகளை பராமரிப்பதற்கான பணத்தையும் அந்நிறுவனம் நிறுத்திவிட்டது.
இதனால் சுமார் 66 குரங்குகள் உணவுகள் இன்றி தவித்துவருகின்றன. மேலும் இந்த குரங்குகளுக்கு உணவு அளிப்பதற்கு மற்றும் பாதுகாப்பதற்கு மாதத்திற்கு 20 ஆயிரம் பவுண்ட் தேவைப்படுவதாக விலங்குகள் தொண்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
தற்போது சில பாதுகாவலர்கள் மட்டும் இந்த குரங்குகளுக்கு படகுகளில் வந்து உணவு அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-http://world.lankasri.com































நமது அனுதாபத்தைத் தான் பதிவு செய்ய முடியும். வேறு ஒன்றும் தெரியவில்லை.
கண் கலங்கி விட்டது !
அந்த குரங்குகளுக்கு உணவு உதவிக்கு வங்கி கணக்கு ஒன்று ஆரம்பித்தால் நல்லாதாக இருக்கும் ,6 அறிவு மிருகங்கள் செய்த கொடுமை இது .5 அறிவு முருங்கள் 6 அறிவுகாரனை விட மேல் .இந்த வாய் இல்லாத ஜீவன்களுக்கு இறைவன் அருள் புரிவார் என்று நம்புகிறேன்
கோடான கோடி உயிர்களுக்கு அனுதினமும் உணவு அளித்து
வரும் இறைவன் நிச்சயம் உதவுவார்.
அந்த ஆராய்ச்சி நிறுவனத்தை ஏன் லைபீரியாவின் விலங்கு வதை தடுப்பு கழகம் சட்டத்தின் முன் நிறுத்த வில்லை– அதை அமெரிக்காவிலேயே செய்யலாமே?
ஊழல் அடிப்படையாக இருந்தாலும் இருக்கலாமோ?
இவைகள் நம்மின் மூதாதையர்கள். இது நாம் மனதில் இருத்திக்க வேண்டும். எங்குமே எல்லாமே வாய்ப்பேச்சாக இருக்கிறது. அவைகள் பாவப்பட்ட உயிர்கள் என்று ஏன் எண்ணுவதில்லை? இதெல்லாம் கொடுமைகள்.