நன்கொடை என்பதை திட புத்தியுள்ள மலேசியர்கள் ஏற்க மாட்டார்கள்

saneபிரதமர்  நஜிப்  அப்துல் ரசாக்கின்  சொந்த  வங்கிக்  கணக்கு  பற்றி  எம்ஏசிசி விடுத்த  அறிக்கை  1எம்டிபி  விவகாரம்  பற்றிய  எந்த  முக்கியமான  கேள்விக்கும்  பதில்  அளிக்கவில்லை.

மாறாக, புதிய கேள்விகள்தான்  எழுகின்றன  என்று  பிகேஆர்  தலைமைச்  செயலாளர்  ரபிஸி  ரம்லி  கூறினார்.

“எந்த  எதிர்பார்ப்புமின்றி  நன்கொடையாளர்  ஒருவர்  ரிம2.6பில்லியனை  பிஎன்னின் 13வது  பொதுத்  தேர்தல்  செலவுக்காக நஜிப்பிடம்  கொடுத்தார்  என்ற  விளக்கத்தைத்  தெளிந்த  புத்தியுள்ள  எந்த  மலேசியனும்  ஏற்க  மாட்டான்.

“எனவே, அம்னோ  தலைமைத்துவம்  பேசும்  நன்கொடைகளை  எம்ஏசிசி  சட்டத்தின்  பகுதி 3-இன்படி  கைக்கூலியாக  வரையறுக்க  முடியும்”, என்றவர்  கூறினார்.

இந்த  அரசியல்  நிதியளிப்பு  பற்றி  எம்ஏசிசி-இல் புகார்  செய்து  அதன்மீது  விசாரணை  நடத்த  அந்த  ஆணையத்துக்கு  அழுத்தம்  கொடுக்க  வேண்டும்  என்று   நாடு  முழுக்க  உள்ள  அடிநிலை  தலைவர்களுக்கு  பிகேஆர்  தலைமை  உத்தரவிட்டிருப்பதாக  ரபிஸி  கூறினார்.