அம்னோவுக்கு ரிம2.6பில்லியன் நன்கொடை: அது ஏன் முகைதினுக்கு தெரியவில்லை?

whymuhyddindidnot knowபிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட வங்கிக்கணக்கில் வைக்கப்பட்ட ரிம2.6பில்லியன் அம்னோவுக்கானதாகும் என்றால், அது எப்படி அம்னோவின் துணைத் தலைவரான முகைதின் யாசினுக்கு தெரியாமல் போனது?

பாரிசானின் வியூகத் தொடர்பு இயக்குனர் அப்துல் ரஹ்மான் டாலான் நேற்று ஒரு தொலைக்காட்சி நேர்க்காணலில் அந்தத் தொகை ஓர் அரசியல் நன்கொடை என்று கூறியிருந்ததற்கு எதிர்வினையாற்றிய பிகேஆர் உதவித் தலைவர் ரபிஸி ரமலி இக்கேள்வியைக் கேட்டார்.

கடந்த திங்கள்கிழமை எம்எசிசி ரிம2.6 பில்லியன் நன்கொடையாக பெறப்பட்டது என்றும் அது அரசுக்குச் சொந்தமான 1எம்டிபியிபிருந்து அல்ல என்று அறிவித்திருந்தது. ஆனால், விபரம் ஏதும் அளிக்கவில்லை.

கசியவிடப்பட்ட ஒரு வீடியோ பதிவில் அது குறித்து நஜிப்பிடம் வினவியதாகவும் அது மத்தியக்கிழக்கிலிருந்து பெறப்பட்டது என்று நஜிப் கூறியதாகவும் முகைதின் கூறுகிறார்.

இதுவரையில் வெளியிடப்பட்டுள்ள விளக்கங்கள் திருப்திகரமானதாக இல்லை. ஆளும் பாரிசான் முழுமையான விளக்கம் அளிக்க வேண்டும் என்று ரபிஸி வலியுறுத்தினார்.