புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய புதிய மருந்து: இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் சாதனை

cancer_001இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரு விஞ்ஞானிகள் புற்றுநோயை குணப்படுத்தக்கூடிய புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளனர்.

வெக்ஸ்னர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றும் தாஸ்குப்தா, ஓகியோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் பாசு ஆகிய இரு இந்திய வம்சாவளி விஞ்ஞானிகள் இந்த சாதனையை படைத்துள்ளனர்.

அவர்களின் 14 வருட ஆராய்ச்சியில், “தோமைன்” என்ற மகிழ்ச்சிபடுத்தும் ஹார்மேன் புற்றுநோயை குணப்படுத்தும் வல்லமை பெற்றிருப்பது தெரியவந்துள்ளது.

முதற்கட்டமாக இந்த மருந்தை எலிக்கு செலுத்தி வெற்றி பெற்றுள்ளனர்.

மனிதர்கள் மீதும் இச்சோதனை வெற்றி பெற்றால் மிகக் குறைந்த விலையில் புற்றுநோய்க்கான மருந்து கிடைக்கும் என்று அவர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://www.tamilwin.com