மத்தியதரைக் கடலில் 40 அகதிகள் சாவு; 300 பேர் மீட்பு

libia_refugee_001ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புகுவதற்காக, ஆபத்தான முறையில் மத்தியதரைக் கடல் வழியாக பயணித்த 40 அகதிகள் உயிரிழந்ததாக இத்தாலியக் கடற்படை தெரிவித்தது.

மேலும், நடுக்கடலில் சிக்கித் தவித்த 300 அகதிகள் மீட்கப்பட்டதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழந்த அகதிகளின் எண்ணிக்கையும், மீட்கப்படும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கலாம் எனவும் இத்தாலியின் “ராய்நியூஸ்24டிவி’ தொலைக்காட்சி தெரிவித்தது. மத்தியதரைக் கடல் வழியாக ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் புக வரும் அகதிகளின் எண்ணிக்கை, இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக புலம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு

தெரிவித்துள்ளது.

-http://www.dinamani.com