இலங்கையில் 16 ஆசனங்கள் பெற்று மூன்றாவது பலமுள்ள கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு

tna_colombo_1இலங்கையில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக 14 ஆசனங்களைக் கைப்பற்றி, மூன்றாவது பெரும் கட்சியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.

மாவட்ட ரீதியாக யாழ்ப்பாணத்தில் 5, வன்னியில் 4, மட்டக்களப்பில் 3 , திருகோணமலை மற்றும் அம்பாறையில் தலா 1 என மொத்தம் 14 ஆசனங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது.

ஐதேக, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு அடுத்து, மாவட்ட ரீதியாக அதிக ஆசனங்களை வென்ற கட்சியாக கூட்டமைப்பு உருவெடுத்துள்ளது.

மேலும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தேசியப் பட்டியலில் இரண்டு ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அவ்வாறு தேசியப் பட்டியல் மூலம இரண்டு ஆசனங்கள் வழங்கப்பட்டுள்ளதால், தமிழ் தேியக் கூட்டமைப்பின் பலம் 16 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-tamilwin.com

TAGS: