பேங்காக் வெடிகுண்டு தாக்குதலில் தொடர்புடைய நபர் கைது: வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்களையும் கைப்பற்றிய பொலிசார்

thai_blast_arrest_001பேங்காக் வெடிகுண்டு தாக்குதலைத் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த தாய்லாந்த் பொலிசார் இச்சம்பவத்தில் தொடர்புடைய நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குற்றவாளி என சந்தேகிக்கப்படும் அந்த நபர் தங்கியிருந்த வீட்டை அதிரடியாக சோதனையிட்ட தாய் பொலிசார், அங்கிருந்து வெடிகுண்டு தயாரிக்கும் பொருட்கள் மற்றும் 10 கடவுச்சீட்டுகள் என திரளான பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட அந்த நபர் வெடிகுண்டு விபத்து தொடர்பாக தாய் பொலிசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி போன்றிருப்பதாக தேசிய காவற்துறை செய்தித்தொடர்பாளர் Prawut Thavornsiri கருத்து தெரிவித்துள்ளார்.

மேலும், தாய் பொலிசாரால் தேடப்பட்டு வந்த குற்றவாளி தற்போது கைது செய்யப்பட்ட அந்த நபர் அல்ல என்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பொலிஸ் அதிகாரிகள் உறுதி செய்தனர்.

கடந்த 17-ம் திகதி ஏரவான் கோவிலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்த்தில் வெளி நாட்டினர் உள்ளிட்ட 20 பேர் உடல் சிதறி பலியாகினர்.

இது தொடர்பாக தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த தாய் பொலிசார், குற்றவாளியின் கணினி வரைபடத்தையும் வெளியிட்டு உரிய வெகுமதி அளிப்பதாகவும் உறுதியளித்திருந்தனர்.

-http://world.lankasri.com