புதிய கூட்டணி அமைக்க எதிரணியினருக்கு பிகேஆர் அழைப்பு

discussபிகேஆர்  தலைவர்  வான்  அசிசா  வான்  இஸ்மாயில்,  ஒரு  புதிய  கூட்டணி  அமைப்பது   பற்றி  விவாதிக்க  மற்ற  எதிரணித்  தலைவர்கள்  மூவரை  அடுத்த  செவ்வாய்க்கிழமை  வட்டமேசை  பேச்சுகளுக்கு  அழைத்திருக்கிறார்.

“ஒரு  எதிரணித்  தலைவர்  என்ற  முறையில்  மற்ற  எதிரணித்  தலைவர்களுடன் கூடிப்  பேசுவதற்கான  முயற்சிகளை  முன்னெடுத்திருக்கிறேன்.

“இறை  அருளால், இப்பேச்சுகளின்வழி  மக்கள்  விரும்புவதுபோல்  ஒரு  புதிய  கூட்டணி  அமையலாம்.  அதற்கான  வலுவான  கடப்பாடு  இருக்கிறது  என்று  நான்  நம்புகிறேன்”, என்றவர்  அழைப்பிதழில்  தெரிவித்துள்ளார்.

டிஏபி  நாடாளுமன்றத்  தலைவர்  லிம்  கிட்  சியாங்,  பாஸ்  தலைவர்  அப்துல்  ஹாடி  ஆவாங், அமானா  தலைவர்  முகம்மட்  சாபு,  பல  என்ஜிஓ  தலைவர்கள்,,  சைபுடின்  அப்துல்லா,  சைமல்  சிபாவுன்  போன்ற  பெருமக்கள்  அகியோருக்கு  வட்டமேசைப்  பேச்சுக்கு  அழைப்பு  அனுப்பப்பட்டுள்ளது.