ஐஜிபி: போலீஸ் நஜிப்பின் கருவி அல்ல: கைருடின் சட்டத்தை மீறியுள்ளார்

saboபிரதமர்   நஜிப்  அப்துல்  ரசாக்  1எம்டிபி  விவகாரத்தை  மூடிமறைக்க போலீசை  ஒரு  கருவியாகப்  பயன்படுத்திக்  கொண்டிருப்பதாக  பாஸ்  பொக்கோக்  சேனா  எம்பி  மாபுஸ்  ஒமார்  கூறியிருப்பதை  போலீஸ்  படைத்  தலைவர்  காலிட்  அபு  பக்கார்  மறுத்துள்ளார்.

அரசாங்கத்தைக்  கவிழ்ப்பதற்குச்  சதி  செய்தார்  என   முன்னாள்  அம்னோ  உறுப்பினர்  கைருடின்  அபு ஹசானை  போலீஸ்  கைது  செய்ததை  அடுத்து  மாபுஸ்  அப்படிக்  கூறினார்.

மலேசியாவில்  விசாரணை  நடைபெறும்  வேளையில்  கைருடின்  பல  வெளிநாடுகளில்  1எம்டிபி  பற்றிப்  புகார்  செய்தார்.  அதனால்தான் அவர்  கைது  செய்யப்பட்டார்  என காலிட்  கூறினார்.

கைருடின்  உள்நாட்டு நிறுவனங்கள்  அவற்றின்  பணியைச்  செய்வதற்கு  இடமளித்திருக்க  வேண்டும்.  உலகம்  சுற்றி  புகார்களைப்  பதிவுசெய்து  “மலேசியாவின்மீது  அனைத்துலக  அழுத்தம்  பெருக”  வழிகோலியது  தப்பு  என்றார்.

“இது  நாட்டின்  பொருளாதாரத்தையும்  இறையாண்மையையும்  நிலைகுலைய  வைக்கும்  ஒரு  ஒருவகை  சதி”, என்று  காலிட்  ஓர்  அறிக்கையில்  கூறினார்.