ஜமால்மீது போலீஸ் விசாரணை

jamalசனிக்கிழமை,  பெட்டாலிங்  ஸ்திரிட்டில்  கலகம் வெடிக்கலாம்  என்று  கூறிய சுங்கை பெசார்  அம்னோ  தொகுதித் தலைவரான ஜமால் முகமட் யுனூஸ்மீது  செகாம்புட்  எம்பி  லிம்  லிப்   எங்-கும்  இதர பல  டிஏபி  உறுப்பினர்களும்  போலீசில்   புகார்  செய்துள்ளனர்.

நேற்று  ஜமால்  அவ்வாறு  கூறினார்  என்றும்  அதன்  தொடர்பில்  பொலீசார்  விசாரணை  மேற்கொண்டு  கைது  செய்ய வேண்டும்  என்றும்  அவர்கள்  வலியுறுத்தினர்.

“போலீசார் சுங்கை  புசார்  அம்னோ  தலைவர்  ஜமால்  முகம்மட்  யூனுஸ்  சினமூட்டும்  வகையில்  பேசியிருப்பதையும்  மிரட்டியிருப்பதையும்  விசாரிக்க  வேண்டும்  என்று  வலியுறுத்துகிறோம்.

“உடனடியாகக்  கைது  செய்ய வேண்டும்  என்றும்  கேட்டுக்கொள்கிறோம்”, எனப்  போலீஸ்   புகாரில்  அவர்கள்  குறிப்பிட்டிருந்தனர்.

டாங்  வாங்கி  போலீஸ்  நிலையத்தில்  அப்புகார்  செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே  த  ஸ்டார்,  ஜமாலை  விரைவில்  போலீசார்  விசாரணைக்கு அழைப்பார்கள்  என்று  போலீஸ்  படைத்  துணைத்  தலைவர்  நூர்  ரஷிட்  இப்ராகிம்  கூறியதாக  அறிவித்துள்ளது.