சிலுவையில் ஏற்றி ஐ.எஸ்.தீவிரவாதிகள் சித்திரவதை: சிறுவர்களை பார்க்க வைத்த கொடுமை

isis_boystatement_001ஐ.எஸ்.தீவிரவாதிகளால் சிலுவையில் ஏற்றி சித்திரவதை செய்து தண்டிப்பதை சிறுவர்களை கூட்டி வைத்து கட்டாயப்படுத்தி பார்க்க வைத்துள்ளனர்.

ஐ.எஸ்.தீவிரவாதிகள் தங்களால் தண்டனை வழங்கப்படும் வீடியோ பதிவுகளை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

இதில் பிணையக்கைதிகள் முதல் தவறிழைக்கும் அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் தண்டிக்கப்படுவதை பதிவாக வெளியிட்டு அவர்கள் மீது அச்சத்தை உருவாக்கி வருகின்றனர்.

அந்த வகையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் மற்றும் வீடியோ பதிவில் அடையாளம் தெரியாத இரண்டு பேரை சிலுவையில் ஏற்றி சித்திரவதை செய்வதையும், தலையை துண்டித்து படுகொலை செய்வதையும் வெளியிட்டுள்ளனர்.

இந்த கொடிய நிகழ்வை அப்பாவி சிறுவர்களை கூட்டி வைத்து கட்டாயப்படுத்தி பார்க்க வைத்துள்ளனர் ஐ.எஸ்.தீவிராத அமைப்பினர்.

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சிரியா மற்றும் ஈராக் பகுதியில் நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகளை அப்பாவி பொதுமக்கள் உள்ளிட்ட ஆதரவு இளைஞர்கள் கூடி நின்று வேடிக்கை பார்ப்பது வழமையாக நடந்து வந்துள்ளது.

கடந்த வாரம் இதுபோன்று 12 வயது சிறுவனின் விரல்களை துண்டித்து அவரது பெற்றோரின் முன்னிலையிலேயே ஐ.எஸ்.தீவிரவாதிகளால் சிலுவையிலும் அறையுண்ட சம்பவம் வெளியானது.

அலெப்போ பகுதி கிறிஸ்தவர்களை இஸ்லாத்தை தழுவ கட்டாயப்படுத்தி வந்த ஐ.எஸ்.தீவிரவாதிகள், அப்பகுதியில் போதகராக இருக்கும் ஒரு குடும்பத்தையே சித்திரவதை செய்து படுகொலை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-http://world.lankasri.com