இராணுவத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது: சரத்

sarath_fonseka-300x171இறுதி மோதல்களின் போது இராணுவத்தினர் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டார்கள் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பதற்கான சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளதாக முன்னாள் இராணுவத் தளபதியும், ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஜனநாயகக் கட்சி நேற்று புதன்கிழமை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளதாவது, “ஜெனீவாவுக்கு யாருக்கும் சென்று குற்றச்சாட்டுகள் முன்வைக்க முடியும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூட அங்கு சென்றிருக்கிறார். எமக்கெதிரான குற்றச்சாட்டுகளுக்கு பதில் வழங்க சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. யுத்தத்திற்கே தாமே உத்தரவு வழங்கியதாக சிலர் கூறுகின்றனர். ஆனால் யுத்தத்தில் அதிக பங்களிப்பு செய்தது நானே.

தேவையான உத்தரவுகள் மாற்றங்கள், பயிற்சிகள், திட்டமிடல்கள் என்பவற்றை மேற்கொண்டேன். உலக சம்பிரதாயங்களுக்கு அமைவாக யுத்தத்தை சட்டபூர்வமாக முன்னெடுத்தேன். யுத்தத்தை வேறு யாராவது வழிநடத்தியதாக கூறினால் அது சட்டவிரோதமான செயலாகும். பாதுகாப்பு செயலாளருக்கு இராணுவத்தினருக்கு பணிப்புரை வழங்க முடியாது. தான் உத்தரவு வழங்கியதாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ கூறியிருந்தால் அது சட்டவிரோதமான செயலாகும்.” என்றுள்ளார்.

-http://www.puthinamnews.com

TAGS: