பிரதமர்: சிங்கப்பூர் பண உதவி செய்யும்போது மலேசியா செய்யக்கூடாதா?

aidபிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  1மலேசியா  மக்கள்  உதவி(பிரிம்)த் திட்டத்தின்கீழ்  பணம்  வழங்கப்படுவதைத்  தற்காத்துப்  பேசியுள்ளார். சிங்கப்பூரும்  அவ்விதமே  செய்வதாக  அவர்  சொன்னார்.

“சிங்கப்பூர்  ரொக்கம்   கொடுத்து  உதவும்போது  மலேசியா  பிரிமைக்  கொடுக்கக்கூடாதா?

“வானளாவும்  கட்டங்கள்,  நெடுஞ்சாலைகள்  அமைத்தால் மட்டும்  போதாது. கிராமப்புறத்தில்  இருப்பவர்களுக்கும்  உதவி  தேவைப்படுகிறது”, என  நஜிப்  கூறியதாக  மலாய்  மெயில்  ஆன்லைன்  தெரிவித்தது.

நஜிப்  இன்று  கோத்தா  கினாபாலுவில்  பார்டி  பெர்சத்து  ரக்யாட்  சாபாவின்  பொதுக்கூட்டத்தில் கலந்து  கொண்டார்.