பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் 1மலேசியா மக்கள் உதவி(பிரிம்)த் திட்டத்தின்கீழ் பணம் வழங்கப்படுவதைத் தற்காத்துப் பேசியுள்ளார். சிங்கப்பூரும் அவ்விதமே செய்வதாக அவர் சொன்னார்.
“சிங்கப்பூர் ரொக்கம் கொடுத்து உதவும்போது மலேசியா பிரிமைக் கொடுக்கக்கூடாதா?
“வானளாவும் கட்டங்கள், நெடுஞ்சாலைகள் அமைத்தால் மட்டும் போதாது. கிராமப்புறத்தில் இருப்பவர்களுக்கும் உதவி தேவைப்படுகிறது”, என நஜிப் கூறியதாக மலாய் மெயில் ஆன்லைன் தெரிவித்தது.
நஜிப் இன்று கோத்தா கினாபாலுவில் பார்டி பெர்சத்து ரக்யாட் சாபாவின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.
சிங்கப்பூர் பிரதமர் 2.6 பில்லியன் நன்கொடை வாங்கி தனது சொந்த கணக்கில் வைத்துக் கொண்டாரா? இங்கே மக்கள் கேட்பது இதை. வேறு எதையோ சொல்லி ஏன் திசை திருப்ப வேண்டும்.
கூரிய அறிவு வழங்கக் கூடிய நூல்களை ஒருவர் கற்றிருந்த போதிலும் அவரது இயற்கை அறிவே மேலோங்கி நிற்கும்,
வாழ்க நாராயண நாமம்.
உலகில் எந்த ஒரு பிரதமாரவது ஊழல் பணத்தை பெற்றபின் அது “நன்கொடை” என்று கூறியிருந்தால், அவரை உதாரணம் காட்டி எனக்கு வழங்கிய 2.6 பில்லியன் “ஊழல் பணத்தை” “நன்கொடை” என்று கூறுவதில் என்ன தவறு ? என்று எதிர்கேள்வி கேட்டு எதிர்கட்சிகளையும் மக்களையும் திக்குமுக்காட வைக்க போகிறார் நமது “ஊழல் நன்கொடை நாயகன் நஜிப்”.
அட்ரா சக்கை ! தனக்கு சொந்த புத்தி இல்லைன்னு உண்மையை ஒத்து கொண்டமைக்கு பாராட்டுக்கள்.
BR1M-க்கு சிங்கப்பூர் என்றால் 1MALAYSIA-வுக்கு ISRAEL-லா ? (அதாவது 1ISRAEL) ஓகே ! ஓகே !
அடுத்த நாடுகளை ஒப்பிடாமல் நம் நாட்டுக்கும் மக்களுக்கும் என்ன செய்தால் சிறப்பு என்று யோசனை செய்து செய்யுங்கள் ?????????
இவன் கொடுக்கும் பணம் என்ன எண்ணத்தில் கொடுக்கப்படுகின்றது? இது முக்கியம்– அத்துடன் யாருக்கு சென்றடைகின்றது? சிங்கப்பூரின் நிலை வேறு– சிங்கபூருக்கு பல பில்லியன் சேமிப்பு இருக்கின்றது– அப்பணம் நல்ல வழியில் முதலீடு செய்து அதை உயர்த்துகின்றனர். அனால் இங்கு இவனின் வங்கி கணக்கில் சேருகின்றது– அங்கு மக்களின் பணம் நல்ல வழியில் பாதுகாக்கப்பட்டு நல்ல வழியில் செலவழிக்கப்படுகின்றது– அத்துடன் இந்த பிரதமனின் தில்லு முள்ளினால் நடந்த தேர்வில் சிங்கை மக்கள் அவர்களின் தலைவர்களை இவனுடன் ஒப்பிட்டு PAP க்கு 10% மேல் வாக்கு செலுத்தி யாவரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டனர். முதலில் கணிப்பில் PAP பல இடங்களை கைவிடும் நிலை இருக்கிறது என்று ஊகித்தனர் ஆனால் இங்கு நடந்த நாடகங்களினால் அங்கு தலைவனின் மதிப்பு உயர்ந்தது. உலக ஊழல் நாடுகளில் நம் நாடும் ஒன்று.