கட்சிநீக்கத்தால் அதிர்ச்சியுற்ற அம்னோ பெண்மணி

hamidahதாம்  கட்சியிலிருந்து  நீக்கப்பட்டிருப்பதை  அறிந்து  அம்னோ  கோப்பெங்  மகளிர்  தலைவர்  ஹமிடா  ஒஸ்மான்  குழம்பிப்  போயிருக்கிறார்.

“நம்ப  முடியவில்லை. பரவாயில்லை. வரும்  வெள்ளிக்கிழமை  செய்தியாளர்  கூட்டமொன்றைக்  கூட்டுவேன்”, என்றவர்  மலேசியாகினியிடம்  தெரிவித்தார்.

கட்சிக்  கட்டுப்பாட்டை மீறினார்  என்பதற்காக  ஹமிடா  அம்னோவிலிருந்து  விலக்கப்படுவதாக  அம்னோ  தலைவர்  நஜிப்  அப்துல்  ரசாக்  நேற்று  அறிவித்தார்.

அம்னோ  மகளிர்  பிரிவு  தகவல்  தலைவருமான  ஹமிடா,  கட்சியிலிருந்து  விலக்கப்படுவது  பற்றித்  தமக்குத்  தெரிவிக்கப்படவில்லை  என்றும்  ஊடகங்கள் வழியாகத்தான்  அதைத்  தெரிந்து  கொண்டதாகவும்  கூறினார்.

இதற்குமுன்பு  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்டை  வரவேற்க  சுபாங்  விமான  நிலையம்  சென்றது  ஏன்  என்று  அவரிடம்  விளக்கம்  கேட்டு  கட்சி  கடிதம்  அனுப்பியிருந்தது.

ஹமிடா,  நஜிப்பின்  வங்கிக்  கணக்கில் இருந்த  ரிம2.6 பில்லியன்  விவகாரத்தில்,  பிரதமரைக்  குறை  கூறியதுடன்  அவர்  பதவி  விலக  வேண்டும்  என்றும்  கோரிக்கை  விடுத்து  வந்தார்.