தாம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதை அறிந்து அம்னோ கோப்பெங் மகளிர் தலைவர் ஹமிடா ஒஸ்மான் குழம்பிப் போயிருக்கிறார்.
“நம்ப முடியவில்லை. பரவாயில்லை. வரும் வெள்ளிக்கிழமை செய்தியாளர் கூட்டமொன்றைக் கூட்டுவேன்”, என்றவர் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
கட்சிக் கட்டுப்பாட்டை மீறினார் என்பதற்காக ஹமிடா அம்னோவிலிருந்து விலக்கப்படுவதாக அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று அறிவித்தார்.
அம்னோ மகளிர் பிரிவு தகவல் தலைவருமான ஹமிடா, கட்சியிலிருந்து விலக்கப்படுவது பற்றித் தமக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் ஊடகங்கள் வழியாகத்தான் அதைத் தெரிந்து கொண்டதாகவும் கூறினார்.
இதற்குமுன்பு முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட்டை வரவேற்க சுபாங் விமான நிலையம் சென்றது ஏன் என்று அவரிடம் விளக்கம் கேட்டு கட்சி கடிதம் அனுப்பியிருந்தது.
ஹமிடா, நஜிப்பின் வங்கிக் கணக்கில் இருந்த ரிம2.6 பில்லியன் விவகாரத்தில், பிரதமரைக் குறை கூறியதுடன் அவர் பதவி விலக வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வந்தார்.
நயவஞ்சக எண்ணம் கொண்டு ஊழலுக்கும் சண்டீர்தனத்திர்க்கும் உடந்தையாக இருப்போருக்கு வாழ்நாளில் கிடைத்த மறக்க முடியாத பாடம் இது. தெய்வம் நின்று கொல்லும் என்பது உண்மையானது.
அம்னோவில் இது என்ன புதிதா??? அனைத்து ஊழலையும் மறைத்து மறந்து ஜால்ரா போட்டால் பதவி வருமானம் நிலைக்கும்!! இல்லையெனில், அம்போதான்!!!! “சிவாஜி த போஸ்” படம் பாருங்கள்!!! தி “ப்ளேக் ஷீப்” புரியும்!!
அம்னோ தலைவர் நஜிப் 2.6 பில்லியன் நன்கொடை என “ஊழலை” நீக்கியதை நம்பியதைபோல் இதையும் நம்பித்தான் ஆக வேண்டும்.