தாப்பா கொலைச் சம்பவம்: விடுவிக்கப்பட்ட தந்தையும் மகனும் மீண்டும் கைது

tapahதாப்பா,  ஜாலான்  பகாங்கில் நான்கு  பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பில் சந்தேகத்தின்பேரில்  கைது  செய்யப்பட்டிருந்த  மெக்கானிக்கான ஒரு  தந்தையும் அவரது மகனும்  இன்று  விடுவிக்கப்பட்டு  மீண்டும்  கைது செய்யப்பட்டனர்.

அவ்விருவரும்  1959-ஆம் ஆண்டு குற்றவியல் தடுப்புச் சட்டத்தின் கீழ்  கைது செய்யப்பட்டதாக  மாநில  சிஐடி  தலைவர்  கோ  கொக்  லியாங்  கூறினார்.

“விசாரணை  முடியும்வரையில்  நாளை  தொடங்கி  21  நாள்களுக்கு  அவர்கள்  தடுப்புக்  காவலில்  வைக்கப்படுவர்”, என்றாரவர்.