யாழ்.குடாநாட்டுக்கு இன்றைய தினம் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே.சிங்கா இன்று மாலை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இன்று மாலை 5.30 மணிக்கு குறித்த சந்திப்பு நடைபெற்றிருந்தது. சந்திப்பின் நிறைவில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
குறித்த சந்திப்பில் இந்திய உயர்ஸ்தானிகர் தம்மிடம், பிரிந்து செல்லும் நிலைப்பாட்டை எடுக்க வேண்டாம் எனவும் இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணும் காலம் நெருங்கி வருவதாகவும் கூறியதாக தெரிவித்த முதலமைச்சர்,
தாம் அதற்கு பதிலளிக்கையில், பிரிந்து செல்லும் எண்ணம் என்னிடம் இல்லை. எமக்கிடையிலான முரண்பாடு கொள்கை ரீதியானது என குறிப்பிட்டதாகவும் கூறினார்.
தொடர்ந்து இந்திய மீனவர்கள் குறித்து பேசப்படுகையில், இந்திய மீனவர்கள் அத்துமீறலினால் எமது மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படும் நிலையில்,
இந்த பிரச்சினைக்கு இரு நாட்டு மீனவர்களும் பேசிக்கொள்வதன் ஊடாகவே தீர்வு கிடைக்கும் என தாம் சுட்டிக்காட்டியதாக முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.





-http://www.tamilwin.com


























எல்லாம் கட்ச தீவை தாரை வார்த்ததின் பலன்– இதை கூட தீர்க்க முடியாத இந்த அரசுகளை என்ன வென்று சொல்வது?
சீனா வைப்பான் ஆப்பு
ஜெயவர்தன –ராஜீவ் கான் ..சர்வதேச ஒப்ந்ததை அமுல் படுத்த அழுத்தம் கூட கொடுக்க முடியாத கார்டு போர்டு வல்லரசு இந்த பிச்சைகார இந்தியா …ஈழ மக்கள் அழிப்பில் முன் நின்றது ..விரைவில் அமெரிக்கா அல்லது சீனா இலங்கையை பிரிக்கும்
தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! இந்திய இயக்கிய நாடகத்தால் பல லட்சம் ஈழ தமிழன் மடிந்தான்!!!
தமிழனின் வாழ்வும் சாவும் தமிழனின் கையில்தான் .மத்திய அரசு தமிழனுக்கு ஊறுகாய் கொடுக்கும் . வயிறு நிறைய உணவளிக்காது .இது கடந்தகால அனுபவங்கள் .
இவர்கள் அரச தந்திரிகள் எதையும் அரச தந்திர ரீதியில் அணுகுவதே மேல் டாமாய் மருத்துவமனையில் நடதியதுபோல் முடியுமா அதற்க்கு வேறு இனம் வுண்டு,
வாழ்க நாராயண நாமம்.
இந்தியாவிற்கு பயம் வந்து விட்டது.தனி ஈழம் அமைத்தால் தமிழன் இந்தியாவின் துரோகத்தை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்டுவான் என்ற பயம்.உலகத்தில் தமிழன் தலை சிறந்து வாழ்ந்துவிடுவான் என்ற அச்சம்.ஈழ மக்களை படுகொலையை செய்த அயோக்கியத்தை தமிழன் உலகத்திற்கு படம் போட்டு காட்டுவான் என்ற குற்ற உணர்வின் தாக்கம்.தமிழனை அடிமையாய் வைத்துகொள்ள முடியாமல் போய்விடும் என்ற கவலை .இன்னுமா தமிழர்கள் ஏமாற போகிறார்கள்.உலாகத்தில் சின்ன சின்ன நாடுகாளில் மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியை வாழ்கிறார்கள்.அது தமிழன் வாழக்கூடாத ?நேற்று நாகரீகம் (மலேசியா ,ஆப்ரிக்கா நாடுகள்)அடைந்த சாமுதாயம் எல்லாம் எப்படி சந்தோசமாக வாழ்கிறது .உலகத்திற்கே நாகரீகம் சொல்லிகொடுத்த தமிழ் இனம் தானி நாடு அமைத்து வாழ தெரியாத ?
தமிழனின் வாழ்வும் சாவும் தமிழனின் கையில்தான் .மத்திய அரசு தமிழனுக்கு ஊறுகாய் கொடுக்கும் . வயிறு நிறைய உணவளிக்காது .இது கடந்தகால அனுபவங்கள் .தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! இந்திய இயக்கிய நாடகத்தால் பல லட்சம் ஈழ தமிழன் மடிந்தான்!!!