நஜிப் பதவிவிலக மேலும் பல அம்னோ கிளைகள் கோரிக்கை

hamdanமேலும்  ஐந்து  அம்னோ  கிளைத்  தலைவர்கள்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  பதவி  விலக  வேண்டும்  எனக்  கோரிக்கை  விடுத்துள்ளனர்.

கோம்பாக்  தொகுதியில்  உள்ள  டெலிமா  லெம்பா  கிராமாட், கம்போங்  கெமென்சா  ஹிலிர்,  ஜெலாதெக்  பெர்மாய்,  லேக்  வியூ  பத்து  கேவ்ஸ், தாமான்  மெலாவாதி ஆகியவையே  அவ்வைந்து  கிளைகளுமாகும்.

அவர்களின்  பேச்சாளர்  ஹம்டான்  அப்ட்  ரஹ்மான்,  இப்போதைய  தலைமையில்  நம்பிக்கை  இழந்து  விட்டதாகக்  கூறினார்.

எந்தவொரு  தனிப்பட்டவரையும்விட  கட்சியே முக்கியம்  என்றும்  அவர்  குறிப்பிட்டார்.

“தனிப்பட்டவர்  நலன்களுக்குமுன்  கட்சியின்   நலனை  முன்வைக்கும்  கலாச்சாரத்தைப்  பின்பற்ற  வேண்டும்”, என  நேற்றிரவு,  கோலாலும்பூர்,  தாமான்  மெலாவாத்தியில்  நடைபெற்ற  செய்தியாளர்  கூட்டத்தில்  அவர்  தெரிவித்தார்.