பேருந்து விபத்தில் பலியான மலேசியர் சடலங்கள் நாளை கொண்டுவரப்படும்

bodyதாய்லாந்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பேருந்து விபத்தில் பலியான 13 மலேசியர்களின் சடலங்கள்  நாளை  மாலை  அரச மலேசிய  ஆகாயப்படை  விமானத்தின் ஹெர்குலிஸ் சி-130  விமானத்தில்  கொண்டு  வரப்படும்  எனத்  தெரிகிறது.

அதே  விமானத்தில்  காயமடைந்தவர்களும்  விபத்தை  அடுத்து  அங்கு  விரைந்த  விபத்தில்  சிக்கிக்  கொண்டவர்களின்  குடும்பத்தாரும்கூட   திரும்பி  வருவார்கள்  என ஜோகூர்  சுற்றுலா, வர்த்தகம்  மற்றும் பயனீட்டாளர்  விவகாரக்  குழுத் தலைவர்  டீ  சியு  கியோங்  கூறினார்.

“டிஎன்ஏ  சோதனைகள்  இன்னும்  முடியவில்லை என்பதால்  சடலங்கள்  நாளைதான்  மலேசியாவுக்கு அனுப்பி வைக்கப்படும்”, என்றவர்  செய்தியாளர்களிடம்  தெரிவித்தார்.