சொந்த தாயாரை படுகொலை செய்த ஐ.எஸ்.தீவிரவாதி: காரணம் என்ன?

is_fighter_killed_mother_001சிரியாவில் ஐ.எஸ்.தீவிரவாதி ஒருவர் பெரும் கூட்டத்தின் மத்தியில் தனது சொந்த தாயாரை துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் ஆதிக்கம் மிகுந்த பகுதியில் பெரும் கூட்டத்தின் மத்தியில் வைத்து அந்த தீவிரவாதி இந்தப் படுகொலையை செய்துள்ளார்.

சிரியாவின் ரக்கா பகுதியில் அமைந்துள்ள தபால் நிலையம் ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார் படுகொலை செய்யப்பட்ட லெனா.

ஐ.எஸ்.தீவிரவாதிகளால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அவர் தமது மகனிடம் ரக்காவில் இருந்து வேறு பகுதிக்கு சென்று விடலாம் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதில் ஆத்திரம் அடைந்த மகன், தமது தலைமையிடம் இதுகுறித்து விவாதித்துள்ளதாகவும், அவர்களின் பரிந்துரையின் பேரில் இந்தப் படுகொலை நடந்துள்ளதாகவும் மனித உரிமைகள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஐ.எஸ்.குழுவில் இருந்து விலகிவிட வேண்டும் என லெனா தெரிவித்ததை அடுத்து ரக்காவில் செயல்பட்டு வரும் இஸ்லாமிய நீதிமன்றத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இஸ்லாமிய நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே லெனாவை படுகொலை செய்யும் குடிவுக்கு வந்துள்ளனர்,

ஆனால் தனது தாயாரை படுகொலை செய்ய ஐ.எஸ்.தலைமை உத்தரவிட்டதா அல்லது இயக்கத்தின் மீது தனது நம்பிக்கையை காட்டும் பொருட்டு அலி சாகர் இச்செயலை செய்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.

-http://world.lankasri.com