ரபிஸி: பக்கத்தான் மலாய்க்காரர் விவகாரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்

harபக்கத்தான்   ஹராபான்  மலாய்க்காரர்  சம்பந்தப்பட்ட  விவகாரங்களுக்கும்  கூடுதல்  கவனம்  செலுத்த  வேண்டிய  தருணம்  வந்து  விட்டது  பிகேஆர்  உதவித்  தலைவர்  ரபிஸி  ரம்லி  கூறினார்.

இதற்குமுன்  எதிரணிக்  கூட்டணி  அவ்விவகாரத்தை  வெளிப்படையான  முறையில்  அணுகியதில்லை  இல்லை.  ரபிஸி, “14வது  பொதுத்  தேர்தலில்  எதிரணி  மலாய்க்காரர்  வாக்குகளைப்  பெற  முடியுமா?”, என்ற  கருத்தரங்கில்  கலந்துகொண்டு  பேசினார்.

“இனியும்  அப்படி  இருக்க  முடியாது.  அவர்கள்  நேரடி  பதிலை  எதிர்பார்க்கிறார்கள்.  அவர்களுக்கு  நாம்  நேரடிப்  பதிலைக்  கொடுக்க  வேண்டும்”, என்றார்.

மலாய்க்காரர்  விவகாரத்தை  அணுகும்போது  அதை  பிஎன்  செய்வதுபோல்  மலாய்க்காரர்களைப்   பெரும்பான்மையாகக்  கொண்ட  கட்சிகளிடமே  விட்டு விடாமல்  ஹராபான் கூட்டாக  அதை  அணுகித் தீர்வு  காண  வேண்டும்.