கேமரன் நிலச் சரிவில் அன்னிய தொழிலாளர் உயிரிழப்பு

mudகேமரன்  மலை  நிலச்  சரிவு  இன்னும் ஒருவரைப் பலி  வாங்கியுள்ளது. இம்முறை  உயிரிழந்தவர்  இரண்டு  நாள்களுக்கு  முன்  மலேசியாவுக்கு  வந்த  அன்னிய  தொழிலாளி  ஒருவர்.

38வயது வங்காள  தேசியான  அவர்  காய்கறித்  தோட்டமொன்றின்  பணியாளரவார். வேலை  செய்த  தோட்டத்துக்கு  அருகிலேயே  குடிசை  கட்டி  வாழ்ந்திருக்கிறார். அதிகாலை  நிலச்  சரிவில்  குடிசையுடன்  சேர்ந்து  புதையுண்டு  போனார்.

தீ அணைப்புப்படையினர்  அவரது சடலத்தை  மீட்டு  போலீசிடம்  ஒப்படைத்தனர்.