பினாங்கில் குடிநீர் பங்கீடு இல்லை: ஊடகத் தகவல் தவறு

waபினாங்கு   குடிநீர்   விநியோக  கார்ப்பரேசன்(பிபிஏபிபி),  கடந்த ஆண்டில்  அம்மாநிலத்தில்  குடிநீர்  பங்கீடு  செய்யப்பட்டதாகக்  கூறும்  ஒரு  பத்திரிகைச்  செய்தியால்  எரிச்சலடைந்துள்ளது.

பினாங்கு  மாநிலம்  குடிநீர்  பங்கீட்டை  அமல்படுத்தியதே  இல்லை  என்று  தெரிவித்த  பிபிஏபிபி  தலைமை  செயல்  அதிகாரி  ஜாசெனி  மைடின்சா  மலாய்  மெயிலில்  வெளிவந்த  அச்செய்தி  தவறானது  என்றார்.

“பிபிஏபிபி  குடிநீர்  பங்கீட்டை  அமல்படுத்துவதற்கு  அல்லாமல்  அமல்படுத்தாமல் இருக்கத்தான்  திட்டமிடும்.

“எதனால்  அந்நாளேடு  நாங்கள்  குடிநீர் பங்கீடு  செய்தோம்  என்று  கூறியது  என்பது  எனக்குப்  புரியவில்லை”, என்றாரவர்.